Recent Posts

August, 2022

  • 4 August

    வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர்

    வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை விடுதலை வரலாற்றில் பலருக்கு விலாசம் இருந்ததில்லை விளம்பரம் இருந்ததில்லை முகம் இருந்ததில்லை முகவரி இருந்ததில்லை. ஏன் அவர்களது முடிவுகள் கூட யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் அவர்களின் ஆளுமையின் இயங்கு சக்தி மட்டும் என்றென்றும் உயிரோடு வாழ்ந்து பல்லாயிரம் பேரை இயக்கிக் கொண்டிருக்கும் பெரும் தீயாகி வியாபித்திருக்கும். இத்தகைய அடையாளங்களுக்குச் சொந்தக்காரனாக இருந்த ஒருவர் றட்ணம் என்ற இயக்கப் பெயரைக் ...

    Read More »
  • 4 August

    வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் !

    ‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் லெப்.கேணல்.சிரித்திரன். வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் சிரித்திரன் பெயரைப் போலவே சிரித்த முகம். வீரத்தை விழிகளில் சுமந்த விசித்திரம் அவன். தமிழீழ வான்புலிகள் சரித்திரத்தில் சிரித்திரனும் ஒரு விடி நட்சத்திரம். விடிவெள்ளிகளின் ஒளிக்கதிர்கள் பார்வையில் சிறுபுள்ளயே. எனினும் அதன் வீரியம் என்பது உலகைவிடவும் ஒளிபொருந்தியது. அப்படியே எங்கள் சிரித்தினும் வீரத்தின் ...

    Read More »
  • 4 August

    மேஜர் ஈழமாறன்& மேஜர் கஜன்

    அந்தத் தாயவளுக்கு இவர்களும் ஓர் பிள்ளை, இவர்கள் அரசியலில் பணிகள் தேசத்தின் விடியலின் தாகத்துடன் பயணித்த போதும் இவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்தவள் ஓர் போராளியின் தாயவள்!!! அன்று கூறினார் அந்தத் தாய்….. என் கருவில் சுமக்கவில்லை ஆயினும் தினம் தினம் என்னை அம்மா என்று அழைத்தவர்கள் இவர்கள் அதனால் என் உள்ளம் மகிழ்ந்தது….. காலத்தின் தேவை உணர்ந்து இன்று வரலாறாக…, மாவீரர் நடுக்கற்களாக….., ஏனோ என் நெஞ்சம் அவர்களின் ...

    Read More »
  • 4 August

    உறுதியின் வடிவம்

    அம்பாறையில் நிந்தவூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் செல்வன் பொறிவெடி செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த இவர் தவருதலான ஒரு வெடிவிபத்தின்போது தன் இரு கைகளையும் – இரு கண்களின் பார்வையையும் இழந்தவர். தற்போதைய நிலையில் ( 1992 காலப்பகுதி ) வட – தமிழீழத்தின் பல பகுதிகளில் பிரச்சார வேளைகளில் ஈடுபட்டிருக்கும் அவரை , உங்களுக்கு அறியத்தருகின்றோம். விடுதலையின் சுவடாக ….. 1985 ” என்ரை காலை எடுத்துப்போட்டினம் அண்ணை ” ...

    Read More »
  • 4 August

    தமிழீழ மக்களுக்கு கரும்புலி வீரர் மடல்

    அன்பான மக்களே! வெற்றி பெற்று வாழ போருக்குத் தயாராகுங்கள் நம்பிக்கையுடன் வெடிக்கின்றேன். அன்புக்கினிய எம் தாய்நாட்டு உறவுகளே வணக்கம்! எங்கள் மக்களின் துன்பம் கண்டு துவண்டு கரும்புலியான எனது உணவுர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். அன்பானவர்களே! உங்களின் வாழ்விற்காக, இருப்பிற்காக எனது உயிரைக் கொடையாகக் கொடுப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். எமது இனத்தைச் சிங்கள தேசம் அழிக்கத் துடிப்பதை நினைக்கும் போதுதான் இன்னும், இன்னும் பல பிறப்பெடுத்து எமது இனத்தின் விடிவிற்காக ...

    Read More »