தொகுக்கப்பட்டவை – நன்னிச்சோழன்
1. எம்.வி. கொரிசோன் (Horizon)
- சம்பவம் நடைபெற்ற திகதி: 13 பெப்ரவரி 1996
- முல்லைதீவுக்கு உயர சரியாக 26 கடல்மைலில் வைத்து
- இந்திய – இலங்கைக் கடற்படைகளுடனான முற்றுகைச் சமரின் போது சிங்கள வான்படையால் மூழ்கடிக்கப்பட்டது.
இவர்களுடன் கப்பலில் இருந்த கடல் வேவுப்புலி மேஜர் இலங்கேஸ்வரன் உட்பட மேலும் இரண்டு கடற்புலிகள் அற்றைய நாளில் வீரச்சாவடைந்தனர்.
2. எம்.வி. இஃவெராட்செசுகொம் (Fratzescom)
- சம்பவம் நடைபெற்ற திகதி: 2 நவம்பர் 1997
- சம்பவம் நடைபெற்ற இடம்: முல்லைத்தீவிற்கு வெளியே
- வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: –
3. எம்.வி. மாரியம்மா(Mariamma)
- சம்பவம் நடைபெற்ற திகதி: 11 மார்ச் 1999
- சம்பவம் நடைபெற்ற இடம்: அந்தமான் தீவுகளிற்கு வெளியே
- இந்தியக் கடற்படை
- வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 2 கடற்கரும்புலிகள்
இந்திய கடற்படை சுற்றி வளைத்து சரணடையக் கூறி எழுதருகை வேட்டுகளைத் தீர்த்த போது உதவிக்கு கடற்புலிகள் வரவியலாத நிலையால் மண்டியிடாமல் வளத்திலிருந்த எரிபொருளை வள்ளத்திற்கு ஊற்றி வள்ளத்தையும் தம்மையும் அழித்துக்கொண்டனர்.
4.எம்.ரி.கொய்மர்(Koimar)
- சம்பவம் நடைபெற்ற திகதி: 10 மார்ச் 2003
- சம்பவம் நடைபெற்ற இடம்: சிறீலங்காவின் கிழக்கு கரையோரத்திலிருந்து 240 கடல்மைல்களுக்கு அப்பால் பன்னாட்டு நீரில் வைத்து
- சிங்களக் கடற்படை
- கடற்கரும்புலி லெப் கேணல் சிலம்பரசன் / ரஞ்சன்
- வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 10 பேர்
இது ஜெனிவா ஒப்பந்த காலத்தில் நடந்தேறிய விதிமீறல். ஒரு நாட்டின் கடல் எல்லை 12 மைல்கள். கூடுதலாக அது 200 கடல் மைல்கள் வரை தன்னலப்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேல் தொடக்கூடாது. ஆனால் சிங்களக் கடற்படையானது தமிழ் மக்களிற்கான டீசலை ஏற்றி வந்த புலிகளின் எண்ணைத் தாங்கியினை(Oil tanker) இந்த பன்னாட்டு கடலில் வைத்து மூழ்கடித்தது. கப்பல் மூழ்கிய இடத்தை பின்னாளில் ஆய்வு செய்த பன்னாட்டு போர்நிறுத்த கண்காணிகள் அது வெறும் வணிகக் கப்பல் என்றும் அதற்குள் ஆயுதங்கள் ஏதும் இல்லையெனவும் அறிக்கையிட்டன.
‘கப்பலின் உட்புறம்’
5.எம்.ரி.சொசின்(Shoshin)
- சம்பவம் நடைபெற்ற திகதி: 10 ஜூன் 2003
- சம்பவம் நடைபெற்ற இடம்: திருகோணமலைக் கரையோரத்திலிருந்து 266 கடல்மைல்களுக்கு அப்பால் பன்னாட்டு நீரில் வைத்து
- சிங்களக் கடற்படை
- மேஜர் நிர்மலன்
- வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 11+1(நாட்டுப்பற்றாளர்) என மொத்தம் 12 பேர்
இதுவும் ஜெனிவா ஒப்பந்த காலத்தில் நடந்தேறிய விதிமீறல் செயல்.
- கலவர்:
‘இவ்விளக்கப்படமானது 2006- 2007 வரை கடற்கலங்கள் எங்கெல்லாம் மூழ்கடிக்கப்பட்ட என்பதைக் கட்டுகிறது | படிமப்புரவு:Google’
6. மருது
- சம்பவம் நடைபெற்ற திகதி: 17 செப்ரெம்பெர் 2006
- சம்பவம் நடைபெற்ற இடம்: கல்முனைக்கு வெளியே 120 கடல் மைல் தொலைவில் வைத்து
- சிறீலங்காக் கடற்படை
- லெப் கேணல் வெற்றியரசன்/ ஸ்ரிஃவன்
- வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 8 பேர்
இது இந்தோனேசியாவில் கட்டப்பட்ட ஒரு பெரிய வேகப் படகாகும்.
- மருதுவின் இறுதித் தருணங்கள்
7.எம்.ரி.கியோசி(Kioshi)
- சம்பவம் நடைபெற்ற திகதி: 28 பெப்ரவரி 2007
- சம்பவம் நடைபெற்ற இடம்: தெய்வேந்திரமுனையிலிருந்து 365 கடல் மைல் தொலைவில் பன்னாட்டு நீரில் வைத்து
- சிறீலங்காக் கடற்படை
- விடுதலைப்புலிகளின் மரபிற்கு ஏற்றவகையில் சரணாகதி அடையாமல் கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு, கப்பலையும் மூழ்கடித்து வீரச்சாவைத் தழுவினர்.
- லெப் கேணல் இளமுருகன்
- வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 15
8. எம்.ரி. செயோய்(Seyo)
- சம்பவம் நடைபெற்ற திகதி: 18 மார்ச் 2007
- சம்பவம் நடைபெற்ற இடம்: அறுகம்குடாவிற்கு தென்கிழக்கில் 825 கடல் மைல் தொலைவில் பன்னாட்டு நீரில் வைத்து
- சிறீலங்காக் கடற்படை
- சமையல் எரிவாயு கலன் கொண்டு கப்பலை தீயிட்டு தாமும் அழிந்து கப்பலையும் அழித்தனர்
- லெப் கேணல் இசைக்கோன்
- வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 9
- இயோசியின் இறுதித் தருணங்கள்
9. எம்.வி.செய்சின்(Seishin)
- சம்பவம் நடைபெற்ற திகதி: 10 செப்டெம்பர் 2007
- சம்பவம் நடைபெற்ற இடம்: தெய்வேந்திரமுனைக்கு தென்கிழக்கே 1400 கடல் மைல் தொலைவில் பன்னாட்டு நீரில் வைத்து
- சிறீலங்காக் கடற்படை
- லெப் கேணல் சோபிதன்
- வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: –
- செய்சினின் இறுதித் தருணங்கள்
10. எம்.ரி.மன்யோசி(Manyoshi)
இது ஒரு எண்ணெய் தாங்கி(Oil Tanker) ஆகும்.
- சம்பவம் நடைபெற்ற திகதி: 10 செப்டெம்பர் 2007
- சம்பவம் நடைபெற்ற இடம்: தெய்வேந்திரமுனைக்கு தென்கிழக்கே 1400 கடல் மைல் தொலைவில் பன்னாட்டு நீரில் வைத்து
- சிறீலங்காக் கடற்படை
- லெப் கேணல் செம்பா எ செண்பகச் செல்வன்
- வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: –
11.எம்.ரி.கொசியா(Koshia)
- சம்பவம் நடைபெற்ற திகதி: : 11 செப்டெம்பர் 2007
- சம்பவம் நடைபெற்ற இடம்: தெய்வேந்திரமுனைக்கு தென்கிழக்கே 1400 கடல் மைல் தொலைவில் பன்னாட்டு நீரில் வைத்து.
- சிறீலங்காக் கடற்படை
- லெப் கேணல் எழில்வேந்தன்
- வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: 7+
- செய்சின், மன்யோசி, கொசியா ஆகியவற்றின் இறுதித் தருணங்கள்:
மேற்கண்ட மூன்று கப்பல்களிலுமாகச் சேர்த்து ஒரு கள மருத்துவர், ஒரு கடற்கரும்புலி உட்பட 20 கடற்புலிகளும் ஒரு நாட்டுப்பற்றாளருமாக மொத்தம் 21 ஆழ்கடலோடிகள் கப்பலினுள் இருந்த ஆய்தங்கள் மூலம் இறுதிவரை சிங்களத்தை எதிர்த்துக் களமாடி வீரச்சாவினைத் தழுவிக்கொண்டனர்.
வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்:
12. எம்.வி.மற்சுசிமா(Matsushima)
- சம்பவம் நடைபெற்ற திகதி:: 7 ஒக்டோபர் 2007
- சம்பவம் நடைபெற்ற இடம்: தெய்வேந்திரமுனைக்கு கிழக்கே பன்னாட்டு 1620கடல் மைல் தொலைவில் பன்னாட்டு நீரில் வைத்து.
- சிறீலங்காக் கடற்படை
- விடுதலைப்புலிகளின் மரபிற்கு ஏற்றவகையில் சரணாகதி அடையாமல் கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு, கப்பலையும் மூழ்கடித்து வீரச்சாவைத் தழுவினர்.
- லெப் கேணல் எரிமலை / கபிலன்
- வீரச்சாவடைந்த கடலோடிகள்: 9
- மற்சுசுமிசாவின் இறுதி தருணங்கள்:
13.பெயர் அறியில்லை
- சம்பவம் நடைபெற்ற திகதி: 20 திசம்பர் 2008
- சம்பவம் நடைபெற்ற இடம்: முல்லைத்தீவிற்கு வடகிழக்கே 70 கடல்மைலில் தமிழீழ கடற்பரப்பில் வைத்து.
- சிறீலங்காக் கடற்படை
- அறியில்லை
- வீரச்சாவடைந்த ஆழ்கடலோடிகள்: அறியில்லை
இது ஒரு நடுத்தர படையேற்பாட்டுக்(logistics) கடற்கலமாகும். இதில் என்ன கொணரப்பட்டது என்பது பற்றிய செய்திகள் இல்லை.
இனி எஞ்சிய கப்பல்களைப் பற்றிப் பார்ப்போம்:
- எம்.வி.ஈசுவரி (Easwari) (போர் முடியும் வரை) → எம்.வி. ஓசீன் லேடி(Ocean Lady) (போர் முடிந்த பின்) . இது பிறகு போரால் பாதிக்கப்பட்ட மக்களை வெளிநாடுகளிற்கு ஏற்றிச் சென்றது.
2. யு.வி. புளூ இஃகவாக்கு(Blue Hawak)
- வேறுபெயர்: யு.வி. இராகுய்(Rakuy)
இது 96 இருக்கைகள் கொண்ட ஓர் வலசை(ferry) ஆகும். ஆனால் சரக்குகள் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்பட்டது.
3. எம்.ரி சோவ மாறு (Showa Maru)
4. எம்.வி. சின்வா(Shinwa)
5. எம்.வி. கோள்டன் பேட்டு (Golden Bird)
- வேறுபெயர்கள்: பாரிசு(Baris), செயின்ற் அந்தோணி(St.Anthony), சோஃவியா(Sophia), பர்ஃகான்(Barhan), சுவனே(Swene)
இதை விட இன்னும் பல கப்பல்கள் புலிகளிடம் இருந்தன. அவை யாவும் எங்குபோனது யாருக்கும் தெரியாது. ஆனால் போர் முடிந்த பின் வெளிநாடுகளில் புலிகளின் 8 கப்பல்கள் இருப்பதாகவும் அவற்றை சிறீலங்காவிற்குக் கொண்ட வர வேண்டும் என்றும் சிங்கள அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- எம்.வி. சன் சீ(Sun sea)
- வேறுபெயர்: இஃகரின் பிஞ் 19 (Harin pinch 19)
இது 492 அகதிகளை எற்றிக் கொண்டு தனது கடைசி உருவோட்டமாக(sail) கனடா சென்றது. அங்கு கனேடிய அரசால் இது தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதன் பாந்தர்களில்(passengers) பெரும்பாலானோர் புலி உறுப்பினர்கள் என்றும் இக்கப்பல் புலிகளிற்குச் சொந்தமானதாகவும் சிங்கள அரசால் (சிங்கள புலனாய்வாளர் குணரத்னே) கூறப்பட்டாலும் அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லையென தமிழர் தரப்பால் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.































