ஸ்ரெல்த் Stealth இது தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் மங்கை படகுக்கட்டுமானத்தின் தயாரிப்பு. கரும்புலி படகினை ராடாரில் தென்படாதவாறும் வேகம் கூடுதலாகவும் தயாரிக்க வேண்டும் என்ற எமது தேசியத் தலைவரின் கருத்திற்கும் சூசை அண்ணா வின் கருத்திற்கும் இணங்க படகின் வடிவமைப்பு ஆரம்பமானது . அக்காலகட்டத்தில் வெளியான ஆங்கில சஞ்சிகையை V மாஸ்டர் மொடல் யாட்டிற்கு கொண்டுவந்தார் அதில் ஸ்ரெல்த் விமானத்தின் படங்களும் சில குறிப்புகளும் இருந்தது Stealth aircraft specifically …
Read More »தமிழர்களின் பண்பாடு பற்றிச் சொல்லும் பாடல்
காலத்துக்குக் காலம் இலக்கியத்தின் தன்மைகள் மாறுபாடு கண்டுள்ளன. வீரம், காதல், போர், பண்பாடு பற்றி தொன்மைக்காலம் முதலாக ஏரளமாய், தாராளமாய் இலக்கிப்பொழிவுகள் இருப்பினும், அந்தந்த காலங்களுக்கேற்ப அதே விடயம் புதிய வடிவங்களில் படைக்கப்பட்டு வந்துள்ளன. இன்றும் தொடர்கின்றன. ஈழப்போராட்ட காலத்தில் வீரம், படைபலம், போர் பற்றியெலாம் பெருந்தொகைப் பாடல்கள் வெளிவந்திருப்பினும் பண்பாடு, தத்துவம் சார்ந்த பாடல்களும் அவ்வப்போது வெளிவந்தன. ஆயினும் வீரம், படைபலம், போர் சார்ந்த பாடல்கள் அளவிற்கு இவை …
Read More »ஓவியக்கலை பயின்ற புலிகள்!
சென்னை ஓவியக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும், தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் தும்பத்திக்கோட்டையில் பிறந்த ஓவியர் புகழேந்தி, ஈழ போராட்டங்களை தனது ஓவிய படைப்புகளின் மூலம் வெளிப்படுத்தி வருபவர். இவரின் ஓவியங்கள் ஈழத்திலும், இந்தியாவிலும், புலம்பெயர் தேசங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவரின் நேர்காணல் ஒன்றை இலக்கு இணையத்திற்கு பிரத்தியேகமாக வழங்கியுள்ளார். அதை உங்களின் பார்வைக்காக தருகின்றோம். தங்களின் ஈழ பயணத்தின் போது தாங்கள் மேற்கொண்ட ஓவியப் பயிற்சி மற்றும் ஓவியக் …
Read More »கவச வாகன அணி பொறுப்பாளர் லெப் கேணல் பார்த்தீபன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு இராணுவ மரபுப் படையணிகளில் ஒன்றான இம்ரான் பாண்டியன் படையணியின் முக்கிய தளபதியும்,கவச வாகனப் பொறுப்பாளருமான லெப் கேணல் பார்த்தீபன் அவர்களின் வீரவரலாற்று நினைவுகள்…! “நடராஜா மகேஸ்வரன்” [திருநெல்வெலி யாழ்ப்பாணம்] வீரப்பிறப்பு-1972-10-09 வீரச்சாவு -2006-08-13 தாயகத்தில் யாழ் மாவட்டத்தில் திருநெல்வேலி கிராமத்தில் பூர்வீக இருப்பிடமாகக் கொண்ட இவரது குடும்பம் பதின்மூன்று சகோதரர்களைக் கொண்டவன் தான் மகேஸ்வரனான பார்த்தீபன்.பத்தாவது புதல்வனான இவன் குகா என்று வீட்டில் செல்லமாக …
Read More »தளபதி வசந்தன்
தாயகக் களத்திடை நண்பன் தளபதி வசந்தன் தலைநகர் படையணி தளபதி வசந்தன் பற்றிய மிக நெடிய போராட்ட வாழ்வியலின் நினைவுகளிலிருந்து…. மிகச் சிறிய அனுபவ பகிர்வாக இதனை முன்வைக்கிறேன். அதிகம் பேசாத, தன்னை முன்னிருத்தாத,முன்னிருத்த விரும்பாத, செயல் வேகத்தாலும், விவேக கரிசனையுடனும் செயலாற்றிய ஆளுமைமிக்கத் தளபதி எங்கள் வசந்தன்.
Read More »சொன்னால் முடியாத சரித்திரமாக….. கேணல் சாள்ஸ்
மன்னார் மாவட்டம் பள்ளமடுப் பகுதியில் 05.01.2008 அன்று சிறிலங்கா இராணுவத்தின் ஆழஊடுருவும் அணியினர் மேற்கொண்ட ‘கிளைமோர்’ தாக்குதலில் விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன் – செந்தூரன்), லெப். சுகந்தன், லெப். காவலன், லெப். வீரமாறன் ஆகிய மாவீரர்கள் வீரச்சாவடைந்தனர். இவர்களுக்கான வீரவணக்க நிகழ்வின் படங்களும், தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் ச. பொட்டு அவர்களின் பகிர்வும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Read More »உறைகரங்கள் – சுமன்
17 வருடங்களாக பேசப்படாமல் புதைக்கப்பட்ட ஒரு கடற்புலி மறவனின் இறுதித் தருணம். 1991 யூலையில் ஆகாயக்கடல் நடவடிக்கை என பெயர் சூட்டப்பட்டு முதலாவது மரபுவழி தாக்குதல் நடவடிக்கை ஆனையிறவுப் பெருந்தளம் மீது நடைபெற்றது. அத்தளம் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட முடியாமல் தப்பித்துப் போனதற்கு கடல்வழி வினியோகமே காரணம் என்பதனை தனது சிந்தனையில் நன்குணர்ந்தார் தேசியத் தலைவர்.கடலில் பலம்பெற்றவர்களாக சிறப்பு கடற்சண்டை படையணியாக கடற்புலிகளை உருவாக்கத் திட்டமிட்டார். 1984 காலப்பகுதியில் இருந்து …
Read More »எங்கள் தேசத்து காண்டீபதாரிகள்… – லெப்டினன்ட் கேணல் மேனன்
வலையொளியில் பேச்சு ஒன்றை கேட்டுக் கேட்டுக் கொண்டிருந்தன். மகாபாரதக் கதையின் கிளைக்கதை என்று அக்கதையினை மிக தத்ரூபமாக சொல்லிக்கொண்டிருந்தார் பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர். “ பாண்டவர்கள் சூதில் தோற்றுப்போய் வனவாசம் சென்ற காலத்துக் கதை அது. பாண்டவர்கள் ஒவ்வொருவரும் தவம் செய்வதற்காக புறப்பட்டார்கள். அதில் காண்டீபதாரி என்று அழைக்கப்படுகின்ற அர்ச்சுணன் கைலாய மலைக்கு சென்று சிவபெருமானை வழிபட்டு அவரை நோக்கி கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டு அவரிடம் இருந்து …
Read More »எழுத முடியாத காவியங்கள்
தாயகத்தின் தந்தை – ச.பொட்டு
ஐயா – வரலாற்றில் பதிவுபெற தவறக்கூடாத பெரிய மனிதர். வரலாற்றில் பதிவு பெறுவதால் பெருமை பெறுவோர் பலர். சிலரை பதிவாக்கிக் கொள்ளுவதால் வரலாறே பெருமை கொள்ளும். அந்தச் சிலரில் ஐயாவும் ஒருவர். இளமையில் இருந்தே உழைத்துப் பழகிய ஐயா இன்றும் அறுபதைத்தாண்டி விட்ட இன்றும் உழைக்கிறார். வன்னி நிலத்தின் புழுதி நிறைந்த சீரற்ற வீதியில் கடகடத்து ஓடுகிறது சைக்கிள். மூச்சுப் பிடித்து முன்தள்ளி மிதித்தால்தான் சைக்கிள் ஓடும். ஆனால் மன …
Read More »
EelamHouse A place for Eelam history documents