ஆழ்கடல் வழங்கல் நடவடிக்கைகளிற்கு கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான லெப். கேணல் சலீம்/கலாத்தன் என்பவர் தலைமை தாங்கினார். இவர் 4 மார்ச், 2009 அன்று கடற்புலிகளின் தளமிருந்த சாலை பகுதியில், சிங்களப்படைகளின் பதுங்கித் தாக்குதலின்போது காயமடைந்து பண்டுவம் பெற்றுவரும் வேளையில் 10 மார்ச் 2009 அன்று வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார்.
Read More »இறுதிக்களத்தில் வீரச்சாவடைந்த 3 சகோதரர்கள் – மாவீரர் ரஞ்சன், குயிலன், அருள்தேவன்
லெப் கேணல் ரஞ்சன் 1983ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து இறுதிப்போர் வரை களமாடிய ஓர் மூத்த போராளி ஆவார். ஆகாய கடல் வெளி நடவடிக்கை, தவளைப் பாச்சல் நடவடிக்கை, வெற்றியுறுதி எதிர்ச்சமர், ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை என தமிழீழத்தின் புகழ்பூத்த பல்வேறு சமர்க்களங்களில் தன் தடம் பதித்து திறமையாக களமாடியவர். லெப் கேணல் குணா அவர்களின் சிறந்த நண்பனுங்கூட. இவர் முள்ளிவாய்க்காலில் 07.04.2009 அன்று லெப் கேணல் ...
Read More »இரு பெரும் சகோதர தளபதிகள் லெப். கேணல் மதன் மற்றும் லெப். கேணல் நளன்
வவுனியா மாவட்டம் கூழாங்குளத்தில் 07-06-1972 ல் பிறந்த துரைசாமி சுந்தரலிங்கம் , 1990 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான் . மதன் என்ற இளம் போராளியாக விளைபூமி – 06 ல் அடிப்படைப் பயிற்சிகளை பெற்று வவுனியா மாவட்ட படையணியில் இணைக்கப்பட்டான் . வேவுப் போராளியாக தன் களச் செயற்பாடுகளை துவங்கிய மதன் , தாக்குதல் அணிகளுக்கு வழிகாட்டியாகவும் செயற்பட்டான் . மேலும் கனரக ஆயுதங்களில் ...
Read More »லெப்ரினன்ற் கேணல் புதியவன் மாஸ்டர்
புதியவன் மாஸ்டர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை குகநேசன் என இயற்பெயர் கொண்ட புதியவன் என்ற மாவீரரின் போராட்ட வரலாறு என்பது பொறுப்புகள். பதவிகளைக் கடந்த உறுதி தளராத நேர்மையும், தன் அடக்கமும், அர்ப்பணிப்பும் நிறைந்த வாழ்வியல் சகாப்தம். யாழ்.மாவட்டம்அரியாலையைச்சேர்ந்தநாட்டுப்பற்றாளர் பண்டிதர் ப.கணபதிப்பிள்ளைக்கும் கனகாம்பிகைக்கும் மகனாக 05.04.1956 ஆம் ஆண்டு பிறந்து குகநேசன் எனும் பெயருடன் வளர்ந்தார். உயர்தரத்தில் விஞ்ஞானபாடரீதியாக நல்ல பெறுபேற்றைப் பெற்றும் சிங்களத் தரப்படுத்தல் மூலம் ...
Read More »லெப்ரினன்ற் கேணல் பூவேந்தன்
1999 ஆரம்ப காலம் ஜெயசிக்குறு சிறிலங்கா இராணுவ நடவடிக்கை ஊடாக இராணுவம் ஒட்டுசுட்டான் சந்தி வரை வந்திருந்தது அப்போது புதுக்குடியிருப்பு வேணாவில் அமைந்திருந்த புலிகளின் படைக்கல பாதுகாப்பு அணியின் முகாமிலிருந்த போராளிகள் இரவு பகலாக தொடர்ந்து படைக்கலங்களை இறக்கி களஞ்சியப்படுத்தி கொண்டுயிருந்தனர். அந்நேரம் கடற்புலிகள் தங்களின் தாக்குதல் பலத்தால் சிங்கள கடற்படையை மீறி சர்வதேச கடற்பரப்பிலிருந்து ஆயுதங்கள் அவற்றுக்கான செல்கள் ரவைகள் மற்றும் போராளிகளுக்கு தேவையான உலர்உணவுகள் உடைகள் அனைத்தையும் ...
Read More »லெப்.கேணல் ஞானழகன்
01/04/1995 ஆம் ஆண்டு தனது பதினாறு வயதில் தமிழீழ இலட்சியத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து மட்டக்களப்பிலிருந்து 18/04/1995 யாழ்மாவட்டம் எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் அமைந்திருந்த கப்டன் ஜெயந்தன் படையணி முகாமிற்கு வந்து சேருகிறான். அதன்பின் 28/05/1995 தொடக்கம் 28/10/1995 வரை லெப்.கேணல் பொன்னம்மான் ஆரம்ப பயிற்சி 06 தனது அடிப்படை பயிற்சியை நிறைவு செய்கிறான். பயிற்சியில் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டதால் சிறுத்தை படையணியிற்கு உள்வாங்கப்பட்டு சிறுத்தை விசேட ...
Read More »போரிற்கு தனது மகளை வழியனுப்பும் ஈழத்து தகப்பன் – இன்றும் சாட்சியாய்!
இன்று எனது அக்கா வீரச்சாவு அடைந்த நாள் 26/04/2009 எனது அக்கா வீரச்சாவடைந்தது பற்றி எனது நினைவில் பின்நேர பொழுது நான் அம்மாவும் முள்ளிவாய்களில் எமது இருப்பிடத்தில் இருக்கையில் அப்பா திருமாஸ்டர் ,திருமாஸ்டரின் மனைவி (டீச்சரும்) பதட்டமான வருகை என்னப்பா என்ன நடந்தது என்று அம்மா கேக்க அக்காவின் வீரச்சாவு செய்தியை எடுத்து வந்தனர் அனைவரும் எங்கள் குடும்பத்தில் இரண்டாவது இழப்பு 07.04.2009 அன்று எனது அண்ணா எறிகணை தாக்குதலில் ...
Read More »படைத்துறைச் செயலக ஆளுமை கேணல் மனோ மாஸ்ரர்
மனோ மாஸ்டர் 1983 இல் தமிழீழ விடுதலைப் போரில் தன்னை இணைத்துக் கொண்டவர். இந்திய மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சிபெற்ற அவர் அங்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறைச் செயலகத்தில் பணியாற்றினார். இந்திய படையினரின் ஆக்கிரமிப்பு நாட்களில் மணலாற்றில் பயிற்றுவிப்பு செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.1989 இல் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியங்களில் படைத்துறை பயிற்சி நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.
Read More »மூத்த தளபதி மாதவன் மாஸ்ரர்
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் ஆரம்பகால பொறுப்பாளருமாகிய, மாதவன் மாஸ்டர் அவர்கள் 2009 முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் வீரச்சாவடைந்துள்ளார். தலைவர், பொட்டமான், மாதவன் மாஸ்ரர் என குறிப்பிடும் அளவிற்கு புலனாய்வுத்துறையின் வளர்ச்சியிலும் அதன் முன்னேற்ற கட்டுமானத்திலும் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read More »