Home / மாவீரர்கள் / மாவீரர் 2009 / வீரச்சாவடைந்த மாவீரர்கள் – 2009 (தொகுக்கப்படாதவை)

வீரச்சாவடைந்த மாவீரர்கள் – 2009 (தொகுக்கப்படாதவை)

வீரச்சாவடைந்த மாவீரர் விபரங்கள் மேலும் சில இன்று கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றை இங்கே தருகின்றோம்.
25.01.2009 அன்று இரண்டு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
லெப்.செவ்வாணன் (தங்கவேலாயுதம் குணாளன், இல.197/ 2ஆம் பகுதி, திருவையாறு, கிளி நொச்சி.)
கப்டன் சிலைவேந்தன் (கண்ணுச்சாமி சிறிதரன், இல.11/01,திருவையாறு, கிளிநொச்சி.)
ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்தவர்களாவர்.
26.01.2009 அன்று பதினொரு போரா ளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
மேஜர் அஜந்தன்/சந்திரன் (சந்தியாப்பிள்ளை யோசப், மன்னார் மாவட்டம், த.மு: கரியாலை நாகபடுவான், முழங்காவில், கிளிநொச்சி. வே.மு. உடையார்கட்டு வடக்கு, முல்லைத்தீவு.)
2ஆம் லெப்.பிரகலாதன் (கோவிந்தசாமி நகுலேஸ்வரன், மட்டு. மாவட்டம்.)
மேஜர் அகன் (மங்களேஸ்வரன் சுரேஸ், தபால்கந்தோர் அருகாமை, ஒட்டுசுட்டான், முல்லைத் தீவு.)
மேஜர் மச்சவள்ளவன் (இராமையா சேர்வைநடராசா, புலோப் பளை கிழக்கு, பளை, கிளிநொச்சி. த.மு.இளங்கோபுரம், றெட்பானா, விசுவ மடு, முல்லைத்தீவு.)
மேஜர் பேரன்பு (சண்முகலிங்கம்,யாழ்.மாவட்டம், த.மு: மல்லாவி, முல்லைத்தீவு)
மேஜர் குறிஞ்சிச்சுடர் (தில்லைநாதன் கஜேந்திரா, இல.334, ஜெயந்திநகர்,கிளிநொச்சி)
 
லெப்.சீர்விழி (இராமநாதன் தயாளினி, பாடசாலை வீதி, செல்வாநகர், கிளிநொச்சி, த.மு: இருட்டுமடு வீதி, உடையார்கட்டு, முல்லைத்தீவு,)
கப்டன் கலையரசன் (திருஞானம் அன்ரன் ஜெயக்குமார், இர ணைமாதா நகர், முழங்காவில், கிளி நொச்சி, த.மு:மூங்கிலாறு, உடையார் கட்டு, முல்லைத்தீவு,)
கப்டன் அன்புமலை (லட்சுமிகாந்தராசா கிருஸ்ணராஜ், யாழ். மாவட்டம், த.மு:தருமபுரம் கிழக்கு, விசுவமடு, முல்லைத்தீவு,)
லெப்.ஒளிநிலா/தூயமுல்லை (இரத்தினம் சுகிர்தா, யாழ்.மாவட்டம், 100 வீட்டுத்திட்டம், சுதந்திரபுரம், உடையார் கட்டு, முல்லைத்தீவு)
கப்டன் சாளரசன் (சத்தியசீலன் ஜெயக்குமார், யாழ். மாவட்டம், இல.49, பனிக்கன்குளம், மாங் குளம், முல்லைத்தீவு,) ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்த வர்களாவர்
 
27.01.2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்
2ஆம் லெப்.அகிலரசன்(அன்னலிங்கம் ரதீஸ், இல.389, ஆறு முகம்வீதி, வட்டக்கச்சி, கிளிநொச்சி, த.மு:சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு)என்ற போராளியே வீச்சாவடைந்த வராவார்.
 
26.01.2009 அன்று ஆய்வாளர் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.
ஆய்வாளர் கிருஸ்ணாகரன்(கந்தையா கிருஸ்ணாகரன், யாழ். மாவட்டம், த.மு:100 வீட்டுத்திட்டம் முன் வீதி, சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு, வே.மு:1ஆம் யுனிற், புகழேந்தி நகர், யோகபுரம், மல்லாவி, முல்லைத் தீவு) என்ற ஆய்வாளரே வீரச்சாவடைந்தவராவார்.

இம் மாவீரர்களுக்குத் தமிழீழ விடு தலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்து கின்றனர்.

 

=================================================================

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடகப் பணிகளை திறம்படச் செய்த லெப்.கேணல் சிறீ

 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடக மற்றும் தகவல் ஆவணப்படுத்தல் பணிகளையும் திறம்படச் செய்து வந்த லெப்.கேணல் சிறீ அல்லது குமரச்செல்வன் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்துள்ளார்.

 

கடந்த 20 ஆண்டுகளாக விடுதலைப் போராட்டப் பணியை ஆற்றிவந்த லெப். கேணல் சிறீ, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளின் தகவல் மொழிபெயர்ப்பு ஆவணப்பகுதியில் பொறுப்பாளராக செயற்பட்டு வந்தார்.

 

இதன் ஊடாக ஊடகப் பணியினை திறம்பட செய்து வந்த இவர், அனைத்துலக உடகவியலாளர்களின் அறிமுகங்களையும் தொடர்புகளையும் ஏற்படுத்தினார்.

 

அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் அறிவியல் மேம்பாட்டுக்கான தகவல்களையும் ஆவணங்களையும் சேகரித்து விடுதலைப் புலிகளின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ஆவணப்படுத்தி வந்துள்ளார்.

 

மேலும், சிறந்த விளையாட்டு வீரராகவும் விளங்கினார். குறிப்பாக துடுப்பாட்டத்தில் இவர் சிறந்து விளங்கினார்.

 

இதே காலப் பகுதியில் வன்னிப் பகுதியில் நடந்த மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான துடுப்பாட்ட சுற்றுப் போட்டிகளில் இவர் சிறப்பாக செயற்பட்டு வந்தார்.

 

யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான இவர், தனது இருபதாண்டு காலத்தில் தாயக விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கான பக்கங்களில் தனது பணியை தனித்தன்மையுடன் சிறப்பாக செய்து வந்தார்.

 

சிவானந்தராஜா சஞ்சீவன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

 

தாயக விடுதலைப் போராட்டத்தில் எதிரியின் வல்வளைப்பு நடவடிக்கைக்கு எதிரான களத்தில் லெப். கேணல் சிறீ தனது இன்னுயிரை ஈர்ந்தார்.

 

விடுதலைப் புலிகளின் முதன்மை ஒலி-ஒளிபரப்புத் தொழில்நுட்பவியலாளர் வீரச்சாவு

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மை ஒலிபரப்புத் தொழில்நுட்பவியலாரும் அறிவிப்பாளரும் ஊடகவியலாருமான மதி என்று அழைக்கப்படும் லெப்.கேணல் மதியழகன் வீரச்சாவடைந்துள்ளார்.

 

லெப். கேணல் மதியழகன் மின்னியல் நுண் தொழில்நுட்பத்தில் மிகவும் திறமையானவராகச் செயற்பட்டார்.

 

புலிகளின் குரலில் முதன்மை ஒலிபரப்பு மையத்தின் ஒலிபரப்புத் தொழில்நுட்பத்தையும் தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் ஒளிரபரப்புத் தொழில்நுட்பத்தையும் திறம்படச்செய்தவரும் இவர் ஆவார்.

 

அத்துடன் செய்மதி தொடர்புகள், செய்மதி வழியிலான ஒலி, ஒளிபரப்புத் தொழில்நுட்பத்தையும் இவர் திறம்பட நெறிப்படுத்தினார்.

 

ஊடகத்துறையில் மிக நுட்பமான தொழில்நுட்பவியலாளரான லெப். கேணல் மதியழகன், சிறிலங்கா படையினருக்கு எதிரான களத்தில் எதிரியுடன் மோதி வீரச்சாவடைந்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும் திருகோணமலையை வாழ்விடமாகவும் கொண்ட இவரின் இயற்பெயர் ச.கிருபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

02-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச் சாவடைந்துள்ளார்.
வீரவேங்கை புயலவன் (நவராசா விஜயகுமார், மட்டு மாவட்டம்) என்ற போராளியே வீரச்சாவடைந்த வராவார்
 
03-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச் சாவடைந்துள்ளார்.
 
கப்டன் பாவலன் (தேவராசா துஸ்யந்தன், யாழ். மாவட் டம்) என்ற போராளியே வீரச்சாவடைந்த வராவார்.
05-02-2009 அன்று இரண்டு போராளி கள் வீரச்சாவடைந்துள்ளனர்.
 
கப்டன் கோதைச்சீரன் (குலசிங்கம் வசந்தகுமார், கண்ணன் கோவில் அருகாமை, ஸ்கந்தபுரம், கிளிநொச்சி)
 
மேஜர் சுதர்மினா (சிவராஜலிங்கம் சிவமதி, வற்றாப்பளை, முள்ளியவளை, முல்லைத்தீவு, த.மு: கணேஸ் திட்டம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு) ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்தவர்களாவர்.
 
07-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.
 

லெப். வினோதினி (நற்குணம் ஜெயந்தி, மட்டு, மாவட்டம்) என்ற போராளியே வீரச்சாவடைந்த வராவார்

 

22.01.2009
லெப்.இன்பரன் (சிவபாதம் பிரதீபன், வன்னிய சிங்கம் வீதி, ஆனந்தபுரம், கிளிநொச்சி. த.மு.4ஆம் முகாம் ஷஆ|பகுதி தேவிபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.)என்ற போராளியே வீரச்சாவடைந்த வராவார்.
25.01.2009
லெப்.அருள்க்கீரன் (யோகநாதன் றொபேட் ரொசான்,இல.325, கரியாலை நாகபடுவான், முழங்காவில், கிளிநொச்சி. த.மு.சுதந் திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்;தீவு.)
2ஆம் லெப்.அறிவுமறவன் (சண்முகநாதன் ஜீவகரன், குரவில் உடையார்கட்டு தெற்கு, முல்லைத் தீவு.)
லெப்.கேணல் சாந்தகுமார் (சிறிரங்கநாதன் கேதீஸ், யாழ். மாவட்டம், த.மு.உயிலங்குளம் வீதி, துணுக்காய், முல்லைத்தீவு. வே.மு. உடையார்கட்டு வடக்கு, முல்லைத் தீவு.)
லெப்.மகான் (பிரபாகரன் ஜெயந்தன், யாழ். மாவட்டம். த.மு.சுதந்திரபுரம், உடை யார்கட்டு, முல்லைத்தீவு.)ஆகிய போராளிகளே வீரச்சா வடைந்தவர்களாவர்.
26.01.2009
கப்டன் தணிகைவேல் (நடராசா உதயகுமார், திருமலை மாவட்டம். த.மு.இளங்கோ குடியிருப்பு, மூங்கிலாறு, உடையார்கட்டு, முல் லைத்தீவு.)
2ஆம் லெப்.இன்குயில் (பூலோகசிங்கம் தர்சினி, வவுனியா மாவட்டம். த.மு.சின்னடம்பன், நெடுங் கேணி, வவுனியா.)
லெப்.கேணல் கோபி (திருநாவுக்கரசு சதீஸ்குமார், யாழ். மாவட்டம். த.மு.இல.16ஃ02, விசுவமடு, முல்லைத்தீவு, வே.மு.சுதந்திரபுரம் பாட சாலை, உடையார்கட்டு, முல்லைத் தீவு.)
வீரவேங்கை கயலேந்தி (மரியதாஸ் மரியநேசன், மன்னார் மாவட்டம். த.மு.மாயவனூர், வட்டக் கச்சி, கிளிநொச்சி.)
லெப்.நிதன் (வல்லிபுரம் ரஜீவ், யாழ்.மாவட்டம். த.மு.12ஆம் கட்டை, விசுவமடு, முல் லைத்தீவு.)ஆகிய போராளிகளே வீரச்சா வடைந்தவர்களாவர்.

07.02.2009

கப்டன் குலவிழி (கங்கேஸ்வரன் யசோதினி, யாழ். மாவட்டம்.) என்ற போராளியே வீரச்சாவடைந்த வராவார்.
08.02.2009
மேஜர் தளிர் (குலசேகரம் குலமதி, யாழ்.மாவட் டம். த.மு.1ஆம், வட்டாரம், புதுக்குடி யிருப்பு, முல்லைத்தீவு.)
மேஜர் கயல்குன்றன் (பேதுரு இருதயராஜ், மன்னார் மாவட்டம்.)ஆகிய போராளிகளே வீரச்சா வடைந்தவர்களாவர்.
09.02.2009
மேஜர் வசந்தி (வீரன் மோகனாதேவி, இல.341, 6ஆம் யுனிற், தருமபுரம், கிளிநொச்சி.)
லெப்.உலகரசன்(மரியதாஸ் அமலராஜ், இல.38, அண்ணாவீதி, ஆனந்தபுரம், கிளி நொச்சி.)

01-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

கப்டன் செஞ்சுடர் (இராசலிங்கம் வேலுகோபால், இல: 80, 155ஆம் கட்டை, கிருஸ்ணபுரம், கிளி நொச்சி) என்ற போராளியே வீரச் சாவடைந்துள்ளவராவார்.
 
02-02-2009 அன்று நான்கு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

வீரவேங்கை எல்லாளன் (வேலாயுதம் சுதர்சன், யாழ். மாவட்டம், த.மு: ஆ. பகுதி, தேவிபுரம், புதுக்குடி யிருப்பு, முல்லைத்தீவு)

லெப். அலைமதி (அமிர்தலிங்கம் ஜெயதாசன், திரு கோணமலை மாவட்டம், த.மு: பொன்நகர் மேற்கு, கரைதுறைப்பற்று, புதுக்குடி யிருப்பு, முல்லைத்தீவு, வேறு முகவரி: 200 வீட்டுத் திட்டம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)

கப்டன் இளங்குமரன் (யோகப்பிரகாசம் திவாகரன், திருகோணமலை மாவட்டம், த.மு: வசந்தம் குடியிருப்பு, வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)

கப்டன் அஞ்சிக்குமரன் (ஏகாம்பரநாதன் கோகுலன், மட்டு. மாவட்டம்) ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்தவர்களாவர்.
03-02-2009 அன்று ஏழு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
 

கப்டன் மெய்யப்பன் (சிவசுப்பிரமணியம் வேலுகாசன், இல: 9802, திருவையாறு, கிளிநொச்சி)

லெப். கலைஒளி (விஜயரத்தினம் தட்சாஜெனனி, யாழ். மாவட்டம், த.மு: றெட்பானா, விசுவமடு, முல்லைத்தீவு)

மேஜர் சிந்துக்குமரன் – வேலன் (முத்துலிங்கம் அரியநாயகம், மட்டு, மாவட்டம்)

லெப். கேணல் மயூரதன் (செபஸ்ரியான் அரியநாயகம், மன்னார் மாவட்டம், த.மு: இரத்தினபுரம், கிளி நொச்சி, வேறு முகவரி சுதந்திரபுரம் உடையார்கட்டு;, முல்லைத்தீவு)

வீரவேங்கை மருதன் (ஆறுமுகம் தவகரன், முப்பெரும் தேவியார் கோவில், முன்பாக, உடையார்கட்டு, முல்லைத்தீவு)

கப்டன் அறிவு (ஆதிராம்பிள்ளை தேவநாயகம், பிரமந்தனாறு, விசுவமடு, முல்லைத்தீவு)

கப்டன் திருமாள் (மகாதேவன் பிரபாகர், திருமலை மாவட்டம், த.மு: ரகு திட்டம், சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு)

ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்துள்ளவர்களாவர்.
03-02-2009 அன்று தலைமைக்காவலர் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.
 
தலைமைக்காவலர் பார்த்தீபன் (உதயகுமார் பார்த்தீபன், இல: 481, 10 யூனிற், தருமபுரம், கிளிநொச்சி, த.மு: சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு) என்ற தலைமைக்காவலரே வீரச்சாவடைந் துள்ளவராவார்.
04-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.
மேஜர் கிருபன் (அத்தோனிப்பிள்ளை ஜெயசீலன், 08ஆம் வட்டாரம், மந்துவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, த.மு: செம்மலை குன்று, இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு) என்ற போராளியே வீரச்சாவடைந்துள்ள வராவார்.
 
04-02-2009 அன்று கடற்கரும்புலி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.
கடற்கரும்புலி மேஜர் செஞ்சுடர் (தர்மலிங்கம் சயந்தினி, யாழ். மாவட்டம், த.மு: செந்தமிழ் பல்பொருள் வாணிபம், நாச்சிக்குடா, முழங்காவில், கிளிநொச்சி) என்ற கடற்கரும்புலியே வீரச்சாவடைந்துள்ளவராவார்.
இம் மாவீரர்களுக்கு வீரவணக்கம்

======================================================

வள்ளிபுனத்தில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல்: கப்டன் நெடுஞ்செழியன் வீரச்சாவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வள்ளிபுனத்தில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் கரும்புலி போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

வள்ளிபுனம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.02.09) பகுதியில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இத்தாக்குதலை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கரும்புலி கப்டன் நெடுஞ்செழியன் நடத்தியுள்ளார்.

இம் மாவீரருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துள்ளனர்.

About ehouse

Check Also

மாவீரர் தவபாலன்

அன்று மே மாதம் 15ம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை மதியம் ஒரு 12மணி இருக்கும்.அப்பா நாங்கள் இருந்த கூடாரத்தை நோக்கி ...

Leave a Reply