Home / ஆவணங்கள்

ஆவணங்கள்

தகட்டு எழுத்துக்களும் அவை குறித்து நிற்கும் பிரிவுகளும்

இது ஓர் புலி உறுப்பினரின் உடலில் கழுத்து, மணிக்கட்டு, இடுப்பு என மூவிடங்களில் கட்டப்பட்டிருக்கும். இதனால் ஒன்று தொலைந்தாலும் மற்றொன்றினை வைத்து அவர் இன்னாரென்று அடையாளப்படுத்த முடியும். இம்மூன்றினுள் ஒப்பீட்டளவில் மெல்லியதாக இருக்கும் தகடே மணிக்கட்டுத் தகடு ஆகும். இதில் மட்டும் த.வி.பு. என்று எழுதப்பட்டிருக்காது. பெரும்பாலான கழுத்துத் தகடுகளில் குருதி வகை குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு புலிவீரனின் உடலில் இருக்கும் இம்மூன்றிலும் ஒரே உறுப்பினர் எண்கள் & குறியீடுகளே குறிப்பிடப்பட்டிருக்கும். இம்மூன்றையும் ...

Read More »

357 கரும்புலிகளின் விபரங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளால் உத்தியோகபூர்வமாக – விபரங்களுடன் – பதிவு செய்யப்பட்ட 357 கரும்புலிகளின் விபரங்களை இந்த இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

Read More »

தமிழீழ அடையாள அட்டை

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக அலகுகளில் ஒன்று ஆட்பதிவு திணைக்களம். இதன் செயற்பாடு 01-01-2007 ஆரம்பமானது. முதன்முதலில் ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் (ச.சித்திரன்) அலுவல்சாராக(Officially) தமிழீழ அடையாள அட்டையினை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுக்கு வழங்கி வைத்துள்ளார்.       அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஆள்அடையாள அட்டைகளில் பிறந்த திகதி பால் பிறந்த இடம் முகவரி தொழில் போன்ற முக்கிய தரவுகள் ...

Read More »

மாவீரர் நாள் மரபாகி வந்த கதை

இதுவொரு தனிப்பட்ட பதிவாகும். ஆவண நோக்கில் பகிரப்பட்டுள்ளது.   வைமன் வீதியில் அமைந்திருந்த ஈழநாதம் நாளிதழின் பணிமனைக்கு ஒருமுறை பொ.பாலசுந்தரம் பிள்ளை (பின்னாளில் யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தராக விளங்கியவர்), வந்திருந்தார். இந்நாளிதழின் ஆசிரியர் பொ.ஜெயராஜைச் சந்தித்த அவர் நாள்தோறும் வெளிவந்த நினைவு­கூருகின்றோம்` என்ற தலைப்பிலான விளம்பரம் பற்றிக்  குறிப்பிட்டார். முன்­னைய ஆண்டுகளில் இதே நாளில் வீரச்சாவெய் திய மாவீரர்களின் பெயர்,முகவரி, சம்பவம் முதலான விடயங்கள் அந்தந்த நாளிதழில் வெளிவந்­துகொண்டிருந்தன. அத்துடன் ...

Read More »

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதிமுடக்கம் பற்றிய செய்தி

சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் 1200 இற்கும் மேற்பட்டவர்களை பணியில் ஈடுபடுத்தி பல மனிதாபிமான உதவி நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் நிதிகளை சிறிலங்கா அரசு 2008 இல் முடக்கம் செய்திருந்தது. அதுபற்றிய நிறுவனத்தின் அறிக்கை வருமாறு: TRO_19_11_08 Tsunami Financial Report

Read More »

தென்தமிழீழ போராளிகளுடன் தலைவரின் நெருடலான சந்திப்பு!

போர் நிறுத்த உடன்பாடு செய்யப்பட்ட நிலையில் தென்தமிழீழத்திற்கு விடுமுறையில் செல்லும் போராளிகளை சந்தித்த தமிழீழத் தேசியத்தலைவர் பல கருத்துக்களை போராளிகளுடன் பரிமாறிக்கொண்டார். அவற்றில் முக்கியமானவை: 1. 18வயதும் அதற்கு மேற்பட்டவர்களே இயக்கத்தில் இணைக்கப்படவேண்டும். 2. தமிழ்பேசும் மக்களாகிய முஸ்லிம் மக்களுடன் பழைய சம்பவங்களை மறந்து நெருக்கமான உறவை பேணவேண்டும் 3. மாறிவரும் சர்வதேச உலகில் சர்வதேச நடைமுறைகளுக்கு அமைவாக மாற்றிக்கொள்ளவேண்டும். தலைவர் மேதகு வே. பிரபாகரன் உரை from Karthick ...

Read More »

நீங்காத நினைவலைகளில் எங்கள் கிளி பாதர்

வன்னி மக்கள் அனைவராலும் கிளி பாதர் என செல்லமாக அழைக்கப்படும் கருணாரட்ணம் அடிகளார் மல்லாவி வவுனிக்குளம் , வன்னிவிளாங்குளம் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டு இன்றுடன் (20.04.2008) 10 வருடங்கள் நிறைவடிகிறது மிகுந்த வேதனை ஒருபுறம் இருந்தாலும் அவரின் பணிகளை நினைக்கும் பொது அவற்றை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய சூழலில் நாம் இன்று இருக்கிறோம் அவர் ஒரு பங்கு தந்தையாக குறிப்பிட்ட ...

Read More »

தமிழீழத் தேசியத் தலைவர் கல்விமேம்பாட்டுநிதியம்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஐம்பதாவது பிறந்தநாளையொட்டிக் கல்விமேம்பாட்டுநிதியம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். ஆண்டுதோறும் ஒரு கோடி உரூபா இந்நிதியத்திற்கு ஒதுக்கப்படும். எம்மால் நடத்தப்படும் தமிழ்மொழித் திறன்தேர்விலும் பொதறிவு மற்றும் உளச்சார்புத் தேர்விலும் சிறந்த பெறுபேறு பெறுவோருக்கு இந்நிதியத்திலிருந்து காசுப்பரிசில்கள் வழங்கப்படும். தமிழீழத்தில், க.பொ.த (சா/த) தரத் தேர்விற் சிறந்த பெறுபேறுகளுடன் தேறி நிதிவாய்ப்பின்மையால் தொடர்ந்து கற்கமுடியாத மாணவருக்கும் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்வதில் நிதிச்சிக்கல்களை எதிர்நோக்கும் மாணவருக்கும் ...

Read More »