Recent Posts

July, 2026

  • 21 July

    சொன்னால் முடியாத சரித்திரமாக….. கேணல் சாள்ஸ்

    மன்னார் மாவட்டம் பள்ளமடுப் பகுதியில் 05.01.2008 அன்று சிறிலங்கா இராணுவத்தின் ஆழஊடுருவும் அணியினர் மேற்கொண்ட ‘கிளைமோர்’ தாக்குதலில் விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன் – செந்தூரன்), லெப். சுகந்தன், லெப். காவலன், லெப். வீரமாறன் ஆகிய மாவீரர்கள் வீரச்சாவடைந்தனர். இவர்களுக்கான வீரவணக்க நிகழ்வின் படங்களும், தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் ச. பொட்டு அவர்களின் பகிர்வும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

    Read More »
  • 21 July

    உறைகரங்கள் – மாவீரர் சுமன்

    17 வருடங்களாக பேசப்படாமல் புதைக்கப்பட்ட ஒரு கடற்புலி மறவனின் இறுதித் தருணம். 1991 யூலையில் ஆகாயக்கடல் நடவடிக்கை என பெயர் சூட்டப்பட்டு முதலாவது மரபுவழி தாக்குதல் நடவடிக்கை ஆனையிறவுப் பெருந்தளம் மீது நடைபெற்றது. அத்தளம் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட முடியாமல் தப்பித்துப் போனதற்கு கடல்வழி வினியோகமே காரணம் என்பதனை தனது சிந்தனையில் நன்குணர்ந்தார் தேசியத் தலைவர்.கடலில் பலம்பெற்றவர்களாக சிறப்பு கடற்சண்டை படையணியாக கடற்புலிகளை உருவாக்கத் திட்டமிட்டார். 1984 காலப்பகுதியில் இருந்து ...

    Read More »
  • 20 July

    எங்கள் தேசத்து காண்டீபதாரிகள்… – லெப்டினன்ட் கேணல் மேனன்

    வலையொளியில் பேச்சு ஒன்றை கேட்டுக் கேட்டுக் கொண்டிருந்தன். மகாபாரதக் கதையின் கிளைக்கதை என்று அக்கதையினை மிக தத்ரூபமாக சொல்லிக்கொண்டிருந்தார் பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர். “ பாண்டவர்கள் சூதில் தோற்றுப்போய் வனவாசம் சென்ற காலத்துக் கதை அது. பாண்டவர்கள் ஒவ்வொருவரும் தவம் செய்வதற்காக புறப்பட்டார்கள். அதில் காண்டீபதாரி என்று அழைக்கப்படுகின்ற அர்ச்சுணன் கைலாய மலைக்கு சென்று சிவபெருமானை வழிபட்டு அவரை நோக்கி கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டு அவரிடம் இருந்து ...

    Read More »
  • 19 July

    தாயகத்தின் தந்தை – ச.பொட்டு

    ஐயா – வரலாற்றில் பதிவுபெற தவறக்கூடாத பெரிய மனிதர். வரலாற்றில் பதிவு பெறுவதால் பெருமை பெறுவோர் பலர். சிலரை பதிவாக்கிக் கொள்ளுவதால் வரலாறே பெருமை கொள்ளும். அந்தச் சிலரில் ஐயாவும் ஒருவர். இளமையில் இருந்தே உழைத்துப் பழகிய ஐயா இன்றும் அறுபதைத்தாண்டி விட்ட இன்றும் உழைக்கிறார். வன்னி நிலத்தின் புழுதி நிறைந்த சீரற்ற வீதியில் கடகடத்து ஓடுகிறது சைக்கிள். மூச்சுப் பிடித்து முன்தள்ளி மிதித்தால்தான் சைக்கிள் ஓடும். ஆனால் மன ...

    Read More »