Recent Posts

August, 2022

  • 4 August

    தண்டனையில் எனக்கும் பங்கு….

    விடுதலை புலிகள் அமைப்பில் பல கட்டுபாடுகளும் ஒழுங்கங்களும் கண்டிப்புகள் இருந்தமையால் உலகம் வியக்கும் தமிழீழ மரபியல் இராணுவமாக வளர்ந்தது யாவரும் அறிந்த விடயம்… எம் அமைப்பில் சில தவறுகளுக்கு முன்னுதாரணமாகவும் இனிமேல் அந்த பிழைகள் ஏற்படாதவாறு திருத்திக் கொள்ளப்படவும் சில தண்டனைகள் வழங்குவது வழமை…. பொறுப்பாளரால் சில தண்டனைகளை வழங்குவதும் குறும்புத் தனத்துடன் போராளிகள் செய்து முடிக்கும் நிகழ்வும் ஓர் சுவாரஸ்யம் அதை அனுபவித்தவர்கள் மனங்கள் இதை படிக்கும் போது ...

    Read More »
  • 4 August

    உள்ளிருந்து ஒருகுரல்

    போராளி மலைமகள் சிறந்த படைப்பாளி பேச்சாற்றல் மிக்கவர் சமர்க்களப் பதிவுகளை ஆவணமாக்கிய அற்பபுதமான பெண் போராளி. இறுதி யுத்தத்தின் முடிவில் காணமற்னோனோருடன் மலைமகளும் காணாமற்போய்விட்டார்… முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து சில மீற்றர்கள் முன்னதாக தனது முன்னணி அவதானிப்பு நிலையை அமைத்திருந்தனர் படையினர். எதிரியை ஈர்க்கக்கூடிய ஆட்டங்கள், அசைவுகள் ஏதுமற்று இயற்கையோடு ஒன்றித்து முடியரசியின் அணி பதுங்கிக் கிடந்தது. எதிரியைப் பார்த்துக் கிடந்தது. வேவுப் பணியை ஒத்த முதன்மையான பணி அது. ...

    Read More »
  • 4 August

    நெஞ்சம் உருகி வெடிகிறதே உம்மை நினைக்கையிலே….

    முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில், நிராயுதபாணிகளாக நின்ற போராளிகளை இனம் கண்டு, அவர்களைக் கைது செய்து நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி பெண் போராளிகளைக் கற்பழித்தும், ஆண் போராளிகளை சுட்டும் வெட்டியும் பல வகைகளில் துன்புறுத்தி கொலை செய்து புதைத்த இலங்கை காட்டுமிராண்டி இராணுவத்தின் மானங்கெட்ட வரலாறுகளை உலகமே அறியும். அந்த மண்ணிலே மடிந்து போன பல போராளிகளோடு அவர்கள் அனுபவித்த வலிகளும், துயரங்களும், உண்மைகளும் அவர்களோடே மறைந்து கிடக்கின்றன..! அவர்களோடு, ...

    Read More »
  • 4 August

    காலமெழுதிய காவியம்

    பகலவன் மேற்குவானில் பவனி வந்து கொண்டிருந்தான். போராளிகள் திட்டமிட்ட இராணுவமுகாம் தாக்குதலுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சிகளை கட்டியிருந்தது. தங்களுக்குத் தரப்பட்ட இராணுவமுகாம் பகுதிகளை குறித்த நேரத்தில் பிடிக்கவேண்டுமென்ற உத்வேகம் எல்லோர் மனங்களிலும் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. அவன் தன்னிடமிருந்த சலனப்படக் கருவியை சரி பார்த்துக் கொண்டிருந்தான். இராணுவமுகாம் தாக்குதலைப் பதிவுசெய்வதே அவனுக்குத் தரப்பட்ட பணி. புகைப்படக் கருவியை கையிலெடுத்ததும் கடந்தகால நிகழ்வொன்று நினைவில் மோதி சிரிப்பூட்டியது. ...

    Read More »
  • 4 August

    மாஸ்ரரை அனுப்புங்கோ….

    போர்க்களமத்தில் ஆயிரம் சோதனைகளும், வேதனைகளும் இருந்தும் அத்தனையையும் ஓர் புன்னகைக்குள் அடக்கி சாதனைச் சிகரமாக உயந்தவர்கள் எங்கள் மாவீரச் செல்வங்கள். களவாழ்விலும், ஓர் பணியிலும் அந்த சூழலில் போராளிகளின் செயலில் வார்த்தைகளும் உதிரும் நகைச்சுகைவளுக்கு பஞ்சமிருக்காது. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி கண்டி வீதி – இத்தாவிற் போர்க்களத்திற் சண்டைகளுக்குள் ஈடுபட்டிருந்த போது…. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியான லெப்.கேணல் ராஜன் (ராஜசிங்கம்) அண்ணா அவர்கள் அங்கு ...

    Read More »