Recent Posts

December, 2020

  • 21 December

    லெப் மணி

    இரணைஇலுப்பைக்குள முன்னரண் இராணுவத்தினரின் ரோந்து அணி மீதான தாக்குதல் ஒன்றுக்காக விசேட படையணியில் ஒருவனாக முட்களும் காய்ந்த காட்டுப்பற்றைகள் ஊடான நகர்வு. கடுமையான களைப்பு குறைந்தளவான உணவும் நீரும். ஆனாலும் அவனது முகத்தில் மலர்ச்சி. அந்தக் களைப்பிலும் தனது பொக்கற்றிலிருந்த சீப்பை எடுத்து, தலைவாரி அடுத்த கட்ட நகர்வுக்கான பயணம். . 22 – 07 – 2000, அதிகாலை வரவேண்டிய இராணுவத்தை குறிவைத்த அந்த தாக்குதல். எதிர்பார்த்ததிலும் அதிக …

    Read More »
  • 21 December

    லெப் கேணல் எழிற்கண்ணன் / எழில்கண்ணன்

    வீரசிங்கம் இரத்தினகுமார் என்ற இயற்பெயரில் அழைக்கப்பட்ட எழில்கண்ணன் மாஸ்டர் என்றால், போராளிகள் மட்டுமல்ல சாளை தொடக்கம் செம்மலை வரையான சிறுவர்கள் பெரியவர்கள் என மக்கள் எல்லோருக்கும் நன்கு அறியப்பட்ட ஒருவர். அது மட்டுமல்ல வடமராட்சி கிழக்கு, மன்னார் மாவட்டத்தின் சில கரையோரக் கிராமங்களில் இன்றும் இவர் நாமத்தை மனதினில் சுமக்கின்றனர் எமது மக்கள். எனக்கு மூன்று வயதாக இருக்கும் போதே, தான் நேசித்த மக்களுக்காக வாழ்ந்து மாவீரர் ஆனார். ஆனால் …

    Read More »
  • 21 December

    லெப் கேணல் பார்த்தீபன்

    தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு இராணுவ மரபுப் படையணிகளில் ஒன்றான இம்ரான் பாண்டியன் படையணியின் முக்கிய தளபதியும்,கவச வாகனப் பொறுப்பாளருமான லெப் கேணல் பார்த்தீபன் அவர்களின் வீரவரலாற்று நினைவுகள்…! “நடராஜா மகேஸ்வரன்” [திருநெல்வெலி யாழ்ப்பாணம்] வீரப்பிறப்பு-1972-10-09 வீரச்சாவு -2006-08-13 தாயகத்தில் யாழ் மாவட்டத்தில் திருநெல்வேலி கிராமத்தில் பூர்வீக இருப்பிடமாகக் கொண்ட இவரது குடும்பம் பதின்மூன்று சகோதரர்களைக் கொண்டவன் தான் மகேஸ்வரனான பார்த்தீபன்.பத்தாவது புதல்வனான இவன் குகா என்று வீட்டில் செல்லமாக …

    Read More »
  • 21 December

    விடுதலைப் போராட்டத்தில் கப்டன் கீர்த்திகா!

    தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கப்டன் கீர்த்திகா என்ற பெயரை அறியாத போராளி கள் அனேகமாக இருக்க மாட்டாரகள். அதுவும் வன்னிக் கிழக்கில் பணியில் இருந்தவர்கள் அறியாமல் இருப்பதற்கு வாய்ப்புக்கள் குறைவு. ஏனெனில் தமிழீழ மருத்துவப்பிரிவி ன் மிக முக்கிய இராணுவ மருத்துவமனை களில் ஒன்று கப்டன் கீர்த்திகா நினைவு இராணுவ மருத்துவமனை. புதுக்குடியிருப்புப் பகுதியில், வீதியில் இருந்து அதிக தூரம் இல்லாது இருப்பினும், வான வெளி தாண்டி வரும் சூரியக்கதிர்கள் …

    Read More »
  • 21 December

    புலனாய்வுத்துறை தாக்குதல் படையணித் தளபதி லெப். கேணல் விசு

    1987 ஆம் ஆண்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தம், இந்தியப்படை வருகை என பல வரலாறுச் சம்பவங்களைக் கொண்ட ஆண்டு . இருப்பைப் பாதுகாத்தல், தலைமையைப் பாதுகாத்தல், கட்டமைப்பைப் பாதுகாத்தல், வளங்களைப் பாதுகாத்தல் அதேநேரம் எதிரியுடன் சண்டையிடல் .சுருங்கக் கூறின் ‘கண்ணையும் பாதுகாக்கவேண்டும், இமையையும் பாதுகாக்க வேண்டும்’ அதேநேரம் பார்க்கவும் வேண்டும். ‘கல்மடு’, ‘இராமநாதபுரம்’; கிளிநொச்சி மாவட்டத்தின் சிறு ஊர்கள் அவை. காட்டுப்புறங்களை ஒரு பகுதியாகவும், நீர்த்தேக்கங்கள், மக்கள் குடியிருப்புக்களை …

    Read More »