Home / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / இரு நாட்டு கடற்படையுடன் போரிட்ட லெப். கேணல் தர்சன்

இரு நாட்டு கடற்படையுடன் போரிட்ட லெப். கேணல் தர்சன்

“ஜெயசிக்குறு” இராணுவநடவடிக்கைக்கு எதிரான மறிப்புச் சமரை படையணிகள் நடாத்திக்கொண்டிருந்த அதேவேளை அத்தாக்குதல் நடவடிக்கைக்குத் தேவையான பொருட்களை தேசியத் தலைவர் அவர்களின் நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையிலும், ஆலோசனைக்கும் அமைவாகவும் கடற்புலிகளின் விநியோக அணிகள் செயற்பட்டுக் கொண்டிருந்தவேளையில் 01.05.1999 அன்று முல்லைத்தீவுக் கரையிலிருந்து லெப். கேணல் தர்சன் அவர்கள் தலைமையிலான படகுத் தொகுதி 110 (N.M) கடல்மைல்களுக்குச் சென்று கப்பலில் பொருட்களை ஏற்றிக் கொண்டுவரும் வேளையில் 55 (N.M) கடல்மைல் தூரத்தில் சிறிலங்கா கடற்படையினரால் கண்காணிக்கப்பட்டு அவர்களின் டோறாப் பீரங்கிப் படகுகள் வழிமறிக்கமுற்பட்ட வேளையில் கடற்படையினருடன் சண்டையிட்டு நகர்ந்து கொண்டிருந்த அதே சமயம் தளபதி லெப். கேணல் நிறோஐன் அவர்கள் தலைமையிலான சண்டைப்படகுகள் வந்து கடற்படையினரை வழிமறித்து தாக்குதல் நடாத்தி விநியோகப் படகு அணிக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தது. அத்தருணத்தில் காங்கேசந்துறையிலிருந்து மேலதிகமாக வந்த டோறாப் பீரங்கிப் படகுகள் கப்டன் ஈழமைந்தன் அவர்களின் விநியோகப் படகை வழிமறிக்க முற்பட்டவேளையில் அக்கடற்படையினருடனான மோதலில் ஈழமைந்தனின் எரிபொருள் விநியோகப் படகு பற்றி எரிந்து கடலில் மூழ்கியது. (கப்டன் ஈழமைந்தனின் படகு அன்றையதினம் எரிபொருள் ஏற்றிக்கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது)

தொடர்ந்து மேலதிகமாக வந்த பல டோறாப் பீரங்கிப் படகுகளுடன் தளபதி நிறோஐன் அவர்களின் சாதுரியத்தால் (அதாவது சிறிலங்கா கடற்படை யின் இலக்கு எங்களின் விநியோகப் படகின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதுதான்; ஏனெனில் விநியோகப் படகுகள் பொருட்கள் ஏற்றி வருவதால் படகின் இயங்கும் வேகம் குறைவாகத்தான் வரும்; ஆகவே சண்டைப் படகுகள் மூலம் டோறா மீது தாக்குதல் நாடத்தி குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் கலைத்தவிட்டு விநியோகப் படகுகளில் இருக்கும் பொருட்களை சண்டைப் படகுகளின் வேகத்திற்கு ஏற்ற சமநிலையில் ஏனைய சண்டைப் படகுகளின் பொருட்களை ஏற்றி வந்தார்கள். இதனால் கடற்படைக்கு விநியோகப்படகுகளை இணங்காணுவது மிகவும் கஸ்ரமாக இருக்கும் என்பதினால்) இவ்யுக்தியை அச்சர்ந்தப்பத்தில் தளபதி நிறோஐன் அவர்கள் கையாண்டமையால் ஏனைய விநியோகப் படகுகளும் பாதுகாப்பாக சாளைத் தளம் வந்தடைந்தது.

From-a-family-Heros-Memorial

இந்நடவடிக்கையில் கடற்புலிகளின் பிரதான கட்டளைமையமான சாளைத் தளத்தின் “றாடர்” கட்டளை மையத்தின் பொறுப்பாளராரும், விநியோகக் தொகுதிக் கட்டளை அதிகாரியுமான லெப். கேணல் தர்சன் / தேவநேயன் (தர்சன் அவர்களின் மேலும் இரண்டு சகோதரர்களும் மாவீரர்களாவர்) உட்பட பதினொரு போராளிகள் அன்றைய தினம் கடலிலே காவியமானார்கள். இவ் அனைத்து நடவடிக்கைகளையும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் சாளைத் தளத்திலிருந்து வழிநடாத்தினார்.

தொடர்ந்து படகுகளிற்கு பொருட்கள் வழங்கிய கப்பலை பற்றிய தகவல்களை இலங்கைக் கடற்படையினர் இந்தியக் கடற்படையினருக்குத் தெரிவித்தனர். அதற்கமைவாக 01.05.1999 அன்று மாலை இந்தியக் கடற்படையினர், இந்திய விமானப்படையின் உதவியுடன் பின்தொடர்ந்து கப்பலிலிருந்தவர்களை சரணடையச் சொல்லியும் எச்சரிக்கை வேட்டுக்கைளைத் தீர்த்தும் கப்பலிலிருந்தவர்கள் தங்களைத் தாங்கள் அழிக்கவேண்டும் இல்லையேல் தங்களிடம் சரணடைய வேண்டும் இதில் எதையாவது ஒன்றைச் செய்யவேண்டும் என்பதற்காக கடும் அழுத்தத்தைத் தொடுத்தனர்.

Samar-Sea-suppliers-action-to-counter-attack-jeyacikkuru-scaled

ஆனாலும் முடிந்தவரை இந்த கடல் முற்றுகையில் இருந்து தப்பிக்கின்றோம், இயலாது விட்டால் முடிவெடுப்பம் என்ற கப்பல் பொறுப்பாளனும், போராளிகளும் கூறி கப்பலைத் தொடர்ந்து செலுத்தினார்கள்.

அவர்களின் உறுதிமிக்க செயற்பாட்டாலும் தேசியத் தலைவர் அவர்களின் ஆலோசனை மிக்க செயற்பாட்டாலும் 05.05.1999 அன்று இவர்களின் கப்பல் கப்பல்கள் செல்லும் பிரதான பாதைக்கு (Shipping Routes) மாற்றப்பட்டு மற்றக் கப்பல்களுடன் சென்றபோது தீடிரென ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் இந்தியக் கடற்படையால் இவர்களது கப்பலை தொடர்ந்து அடையாளம் காணமுடியாமல் போனதால் இவர்களது கப்பல் தங்களது பாதையில் சென்று பிரதான எல்லையை அடைந்தது.

உண்மையில் இந்த ஐந்து நாட்களும் கப்பலிலிருந்தவர்கள் தாங்களும், கப்பலும் எதிரியிடம் பிடிபடக்கூடாது என்பதில் உறுதியாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தனர். கப்பல் பொறுப்பாளனின் செயற்பாடும் மிகவும் அளப்பரியது. கப்பல் பொறுப்பாளனினதும், ஏனைய போராளிகளினதும் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாட்டால் தான் அன்றைய பாரிய இழப்பு தவிர்க்கப்பட்டது எனச் சொன்னால் அது மிகையாகாது.

அன்றைய கள நினைவுகளுடன்…

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

About ehouse

Check Also

வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் !

‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் ...

Leave a Reply