லெப் கேணல் காந்தன் அண்ணை அவர்கள் தமிழீழ கிராம அலுவலகர்கள் ( மனிதவள அலுவலகம்) கட்டமைப்பு மற்றும் முன்னால் புதுக்குடியி ருப்பு பிரதேச உள்ளக புலனாய்வுதுறை பொறுப்பாளர் இவர் யாழ்ப்பாணத்தை சொந்ச இடமாகவும் புதுக்குடியிருப்பு மந்திவில் பகுதியில் வசித்து வந்தவர் இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை யில் உள்ளக புலனாய்வுத்துறையில் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவர் பிரிகேடியர் மாதவன் மாஸ்ரர் அவர்கள் மற்றும் திரு.காந்தி அண்ணை அவர்கள் உள்ளகபுலனாய்வு பொறுப்பாளர்களாக இருந்த காலப் பகுதியில் முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச புலனாய்வு பொறுப்பாளரக இருந்து பின் தமிழீழ கிராம அலுவலகர் (மனித வளம்) பிரிவு உள்ளகபுலனாய்வு பொறுப்பாளராக மிக திறமையாக செயற்பட்டவர்
1999ல் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை க்கு எதிராக புலனாய்வுத்துறை தாக்குதல் அணியில் இருந்து மேற் கொண்ட முறியடிப் பு தாக்குதலில் விழுப்புண் அடைந்தவர்
இதன் பின் புதுக்குடியிருப்பு பிரதேச புலனாய்வு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் அக்காலத்தில் புதுக்குடி யிருப்பு மிகவும் முக்கியமான பகுதியாக இருந்தது இங்கு எதிரி புலனாய்வாளர்களி ன் தயார்ப்படுத்திய நபர்களின் ஊடுருவல் மற்றும் சந்தேக நபர்களை இனங் காணல் அதற்கு எதிராக முறியடிப்பு புலனாய்வு மற்றும் முகவர்கள் தயார்ப்படுத்தல், கண்காணிப்பு பல புலனாய்வு கட்டமைப்பு களை உருவாக்கி பாதுகாப்பாபை உறுதிப் படுத்தும் வகையில் சிறப்பாக செயற்பட்டவர்
இக்காலத்தில் புலனாய்வு பார்வை புத்தகத்திற்கு புலனாய்வு ஆக்கம் எழுதி வந்தவர் அத்துடன் போராளிகள், பணியாளர்களுக்கு புலனாய்வு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக பொது மக்களின் அன்றாட தேவைகளை கவனிப்பதற்கும் ,கண்காணிப்பதற்கு கிராம மட்டத்திலான நிர்வாகத்தை மேற் கொள்வதற்கும் தமிழீழ கிராம சேவகர் பிரிவு (மனிதவள அலுவலகம்) முக்கிய மாவட்டங்களான முல்லைத்தீவு , கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கு புலனாய் வுத்துறையின் உள்ளகபுலனாய்வுத்துறை க்கு கீழ் கொண்டு வரப்பட்டு அதற்கு லெப்கேணல் காந்தன் அண்ணை அவர்களை நியமித்து போராளிகள், பணியாளர்களை தமிழீழ கிராம அலுவலகராக (மனித வள) நியமித்து ஒவ்வெரு கிராமத்திற்கும் வரை படத்துடன் அலுவலகம் திறக்கப்பட்டு திரு.தேசியத்தலைவர் அவர்களின் சிந்தனைக்கு ஏற்ப திறமையாக செயற்ப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது .
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்கால் பகுதியில் இராணுவத்தினருடனான மோதலின் போது காயப்பட்டு 2009.05.12 அன்று வீரச்சாவடைந்தார்