Recent Posts

August, 2022

  • 4 August

    நெஞ்சம் உருகி வெடிகிறதே உம்மை நினைக்கையிலே….

    முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில், நிராயுதபாணிகளாக நின்ற போராளிகளை இனம் கண்டு, அவர்களைக் கைது செய்து நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி பெண் போராளிகளைக் கற்பழித்தும், ஆண் போராளிகளை சுட்டும் வெட்டியும் பல வகைகளில் துன்புறுத்தி கொலை செய்து புதைத்த இலங்கை காட்டுமிராண்டி இராணுவத்தின் மானங்கெட்ட வரலாறுகளை உலகமே அறியும். அந்த மண்ணிலே மடிந்து போன பல போராளிகளோடு அவர்கள் அனுபவித்த வலிகளும், துயரங்களும், உண்மைகளும் அவர்களோடே மறைந்து கிடக்கின்றன..! அவர்களோடு, …

    Read More »
  • 4 August

    காலமெழுதிய காவியம்

    பகலவன் மேற்குவானில் பவனி வந்து கொண்டிருந்தான். போராளிகள் திட்டமிட்ட இராணுவமுகாம் தாக்குதலுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சிகளை கட்டியிருந்தது. தங்களுக்குத் தரப்பட்ட இராணுவமுகாம் பகுதிகளை குறித்த நேரத்தில் பிடிக்கவேண்டுமென்ற உத்வேகம் எல்லோர் மனங்களிலும் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. அவன் தன்னிடமிருந்த சலனப்படக் கருவியை சரி பார்த்துக் கொண்டிருந்தான். இராணுவமுகாம் தாக்குதலைப் பதிவுசெய்வதே அவனுக்குத் தரப்பட்ட பணி. புகைப்படக் கருவியை கையிலெடுத்ததும் கடந்தகால நிகழ்வொன்று நினைவில் மோதி சிரிப்பூட்டியது. …

    Read More »
  • 4 August

    மாஸ்ரரை அனுப்புங்கோ….

    போர்க்களமத்தில் ஆயிரம் சோதனைகளும், வேதனைகளும் இருந்தும் அத்தனையையும் ஓர் புன்னகைக்குள் அடக்கி சாதனைச் சிகரமாக உயந்தவர்கள் எங்கள் மாவீரச் செல்வங்கள். களவாழ்விலும், ஓர் பணியிலும் அந்த சூழலில் போராளிகளின் செயலில் வார்த்தைகளும் உதிரும் நகைச்சுகைவளுக்கு பஞ்சமிருக்காது. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி கண்டி வீதி – இத்தாவிற் போர்க்களத்திற் சண்டைகளுக்குள் ஈடுபட்டிருந்த போது…. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியான லெப்.கேணல் ராஜன் (ராஜசிங்கம்) அண்ணா அவர்கள் அங்கு …

    Read More »
  • 4 August

    வாழ்விலொரு வழிகாட்டி

    சண்டைக்குச் சென்ற படகுகள் கரை திருப்பியிருந்தன. அர்ப்பணம் நிறைந்த வெற்றியைச் சுமந்தபடி கடலலைகள் கரைதழுவிச் சென்றன. விழுப்புண்ணடைந்த போராளிகளைச் சுமந்தபடி வந்த படகு நோக்கி விரைவாய் ஓடினேன். அவன் அணியத்தில் படுத்திருந்தான். அவனின் வயிற்றுப் பகுதி குருதித்தடுப்புப் பஞ்சணையால் கட்டப்பட்டிருந்தது. குருதித்தடுப்புப் பஞ்சணையையும் மீறி குருதி கசிந்திருந்தது. தம்பியாய் பழகியவனின் நிலைகண்டு அதிர்ச்சியுற்றபோதும் அடுத்த கணம் என்னை நிலைப்படுத்திக் கொண்டேன். விழுப்புண்ணடைந்த பெண் போராளியைப் பக்குவமாய் இறக்கி ஊர்தியில் ஏற்றினோம். …

    Read More »
  • 3 August

    வீரச்சாவடைந்த மாவீரர்கள் – 2009 (தொகுக்கப்படாதவை)

    வீரச்சாவடைந்த மாவீரர் விபரங்கள் மேலும் சில இன்று கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றை இங்கே தருகின்றோம். 25.01.2009 அன்று இரண்டு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். லெப்.செவ்வாணன் (தங்கவேலாயுதம் குணாளன், இல.197/ 2ஆம் பகுதி, திருவையாறு, கிளி நொச்சி.) கப்டன் சிலைவேந்தன் (கண்ணுச்சாமி சிறிதரன், இல.11/01,திருவையாறு, கிளிநொச்சி.) ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்தவர்களாவர். 26.01.2009 அன்று பதினொரு போரா ளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். மேஜர் அஜந்தன்/சந்திரன் (சந்தியாப்பிள்ளை யோசப், மன்னார் மாவட்டம், த.மு: கரியாலை நாகபடுவான், முழங்காவில், கிளிநொச்சி. வே.மு. உடையார்கட்டு வடக்கு, முல்லைத்தீவு.) …

    Read More »