Home / ehouse (page 9)

ehouse

கடற்சமரில் ஓர் தளபதியின் தெரிவு ….

ஒரு நாட்டின் எல்லை என தரையில் இருப்பது வழமை, அப்படியாக கடலில் ஆழம் தெரியாதது போல் கடலும் பரந்து நீண்டு கிடக்கிறது… ஒரு நாட்டின் கடற்பரப்பு சராசரி 300 கடல்மைல் (NM) தரையில் ( 3.0 × 10-10 கிலோ மிற்றர் ) கொண்டதாக அமையும் ஆனால் தமிழீழத்தில் 25 கடல்மைல் கொண்டதாக இருந்தது. அது கடற்புலிகளுக்கு ஓயாத அலைகள் வென்றது முதல் கட்டுப்பாட்டுக்குள் சிங்களவன் பிடிதன்னில் இருந்து மீட்ட ...

Read More »

தண்டனையில் எனக்கும் பங்கு….

விடுதலை புலிகள் அமைப்பில் பல கட்டுபாடுகளும் ஒழுங்கங்களும் கண்டிப்புகள் இருந்தமையால் உலகம் வியக்கும் தமிழீழ மரபியல் இராணுவமாக வளர்ந்தது யாவரும் அறிந்த விடயம்… எம் அமைப்பில் சில தவறுகளுக்கு முன்னுதாரணமாகவும் இனிமேல் அந்த பிழைகள் ஏற்படாதவாறு திருத்திக் கொள்ளப்படவும் சில தண்டனைகள் வழங்குவது வழமை…. பொறுப்பாளரால் சில தண்டனைகளை வழங்குவதும் குறும்புத் தனத்துடன் போராளிகள் செய்து முடிக்கும் நிகழ்வும் ஓர் சுவாரஸ்யம் அதை அனுபவித்தவர்கள் மனங்கள் இதை படிக்கும் போது ...

Read More »

உள்ளிருந்து ஒருகுரல்

போராளி மலைமகள் சிறந்த படைப்பாளி பேச்சாற்றல் மிக்கவர் சமர்க்களப் பதிவுகளை ஆவணமாக்கிய அற்பபுதமான பெண் போராளி. இறுதி யுத்தத்தின் முடிவில் காணமற்னோனோருடன் மலைமகளும் காணாமற்போய்விட்டார்… முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து சில மீற்றர்கள் முன்னதாக தனது முன்னணி அவதானிப்பு நிலையை அமைத்திருந்தனர் படையினர். எதிரியை ஈர்க்கக்கூடிய ஆட்டங்கள், அசைவுகள் ஏதுமற்று இயற்கையோடு ஒன்றித்து முடியரசியின் அணி பதுங்கிக் கிடந்தது. எதிரியைப் பார்த்துக் கிடந்தது. வேவுப் பணியை ஒத்த முதன்மையான பணி அது. ...

Read More »

நெஞ்சம் உருகி வெடிகிறதே உம்மை நினைக்கையிலே….

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில், நிராயுதபாணிகளாக நின்ற போராளிகளை இனம் கண்டு, அவர்களைக் கைது செய்து நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி பெண் போராளிகளைக் கற்பழித்தும், ஆண் போராளிகளை சுட்டும் வெட்டியும் பல வகைகளில் துன்புறுத்தி கொலை செய்து புதைத்த இலங்கை காட்டுமிராண்டி இராணுவத்தின் மானங்கெட்ட வரலாறுகளை உலகமே அறியும். அந்த மண்ணிலே மடிந்து போன பல போராளிகளோடு அவர்கள் அனுபவித்த வலிகளும், துயரங்களும், உண்மைகளும் அவர்களோடே மறைந்து கிடக்கின்றன..! அவர்களோடு, ...

Read More »

காலமெழுதிய காவியம்

பகலவன் மேற்குவானில் பவனி வந்து கொண்டிருந்தான். போராளிகள் திட்டமிட்ட இராணுவமுகாம் தாக்குதலுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சிகளை கட்டியிருந்தது. தங்களுக்குத் தரப்பட்ட இராணுவமுகாம் பகுதிகளை குறித்த நேரத்தில் பிடிக்கவேண்டுமென்ற உத்வேகம் எல்லோர் மனங்களிலும் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. அவன் தன்னிடமிருந்த சலனப்படக் கருவியை சரி பார்த்துக் கொண்டிருந்தான். இராணுவமுகாம் தாக்குதலைப் பதிவுசெய்வதே அவனுக்குத் தரப்பட்ட பணி. புகைப்படக் கருவியை கையிலெடுத்ததும் கடந்தகால நிகழ்வொன்று நினைவில் மோதி சிரிப்பூட்டியது. ...

Read More »

மாஸ்ரரை அனுப்புங்கோ….

போர்க்களமத்தில் ஆயிரம் சோதனைகளும், வேதனைகளும் இருந்தும் அத்தனையையும் ஓர் புன்னகைக்குள் அடக்கி சாதனைச் சிகரமாக உயந்தவர்கள் எங்கள் மாவீரச் செல்வங்கள். களவாழ்விலும், ஓர் பணியிலும் அந்த சூழலில் போராளிகளின் செயலில் வார்த்தைகளும் உதிரும் நகைச்சுகைவளுக்கு பஞ்சமிருக்காது. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி கண்டி வீதி – இத்தாவிற் போர்க்களத்திற் சண்டைகளுக்குள் ஈடுபட்டிருந்த போது…. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியான லெப்.கேணல் ராஜன் (ராஜசிங்கம்) அண்ணா அவர்கள் அங்கு ...

Read More »

வாழ்விலொரு வழிகாட்டி

சண்டைக்குச் சென்ற படகுகள் கரை திருப்பியிருந்தன. அர்ப்பணம் நிறைந்த வெற்றியைச் சுமந்தபடி கடலலைகள் கரைதழுவிச் சென்றன. விழுப்புண்ணடைந்த போராளிகளைச் சுமந்தபடி வந்த படகு நோக்கி விரைவாய் ஓடினேன். அவன் அணியத்தில் படுத்திருந்தான். அவனின் வயிற்றுப் பகுதி குருதித்தடுப்புப் பஞ்சணையால் கட்டப்பட்டிருந்தது. குருதித்தடுப்புப் பஞ்சணையையும் மீறி குருதி கசிந்திருந்தது. தம்பியாய் பழகியவனின் நிலைகண்டு அதிர்ச்சியுற்றபோதும் அடுத்த கணம் என்னை நிலைப்படுத்திக் கொண்டேன். விழுப்புண்ணடைந்த பெண் போராளியைப் பக்குவமாய் இறக்கி ஊர்தியில் ஏற்றினோம். ...

Read More »

வீரச்சாவடைந்த மாவீரர்கள் – 2009 (தொகுக்கப்படாதவை)

வீரச்சாவடைந்த மாவீரர் விபரங்கள் மேலும் சில இன்று கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றை இங்கே தருகின்றோம். 25.01.2009 அன்று இரண்டு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். லெப்.செவ்வாணன் (தங்கவேலாயுதம் குணாளன், இல.197/ 2ஆம் பகுதி, திருவையாறு, கிளி நொச்சி.) கப்டன் சிலைவேந்தன் (கண்ணுச்சாமி சிறிதரன், இல.11/01,திருவையாறு, கிளிநொச்சி.) ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்தவர்களாவர். 26.01.2009 அன்று பதினொரு போரா ளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். மேஜர் அஜந்தன்/சந்திரன் (சந்தியாப்பிள்ளை யோசப், மன்னார் மாவட்டம், த.மு: கரியாலை நாகபடுவான், முழங்காவில், கிளிநொச்சி. வே.மு. உடையார்கட்டு வடக்கு, முல்லைத்தீவு.) ...

Read More »

தேராவில் ஆட்லறி தள தகர்ப்பில் வீரச்சாவடைந்த 3 கரும்புலிகளும் 7 மாவீரர்களும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் பாரிய ஆட்லெறி பீரங்கி தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: விசுவமடு பகுதியில் உள்ள தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் அண்மையில் அமைத்திருந்த ஆட்லெறி பீரங்கித் தளத்தை நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு ...

Read More »

மாமனிதர் கலைஞானி செல்வரத்தினம்

கலைஞானி அ.செல்வரத்தினம் ஈழத்தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளைச் தேடிப்பெற்றுப் பாதுகாக்க வேண்டும் என்று தன் வாழ்நாளையே அதற்காகவே அர்ப்பணித்து வந்தவர் திரு.த.செல்வரத்தினம் அவர்கள்.கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக காடுகரம்பையெல்லாம் அலந்து திரிந்து பல அரும் பொருக்களைக் கண்டெடுத்துப் பாதுகாக்க முற்பட்டவர். இப்பணிக்காக பிரமச்சரிய வாழ்க்கையை மேற்கொண்டு தனது சொத்து சுகங்களை எல்லாம் முழுமையாக அர்பணித்து வாழ்ந்தவர். 1933 ஆம் ஆண்டில் குரும்பசிட்டி அரியகுட்டி தம்பதிகளின் மகனாகப் பிறந்த இவர் முதலில் மகாதேவா ...

Read More »