Home / மாவீரர்கள் / மாவீரர் 2009 / மாவீரர் தவபாலன்

மாவீரர் தவபாலன்

அன்று மே மாதம் 15ம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை மதியம் ஒரு 12மணி இருக்கும்.அப்பா நாங்கள் இருந்த கூடாரத்தை நோக்கி வந்தார் என்றுமில்லாதவாறு அன்று அவருடைய முகம் இருந்தது.நானும் அம்மாவும் வெளியில் வந்தோம்.”எல்லாம் முடிஞ்சிட்டு நான் வரமாட்டன் நீங்க போங்கோ” தாளச் சோகத்தில் கதறி அழுது அப்பாவை அணைத்தேன்.இது வரை காலமும் ஒரு சொட்டு கண்ணீரையும் பாத்திராத அவருடைய கண்கள் அன்று அழுதது.இறுதியாக அப்பா விடைபெற நடைபிணங்களாக மாறிய நாங்கள் சரணடைவுக்காக வட்டுவாகல் நோக்கி நடக்க ஆரம்பித்து இடைநடுவே ஓர் இடத்தில் அன்றைய இரவு கழிக்க வேண்டிய சூழ் நிலை 60mm மோட்டார் செல்கள் சரமாரியாக வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்தன.ஏற்கனவே வெட்டி இருந்த அந்த பதுங்குகுழிக்குள் அன்றிரவு ரணமாய் சொல்லமுடியாத அளவு சிந்தனைகளால் நிரம்பியதாய் அந்த இரவு நகர்ந்தது.”
அன்று மே 16 விடிகாலைப்பொழுது சரணடைய வேண்டும் என்பது உறுதியாக விட்ட போதிலும் எங்கே எப்படி என அறிந்திருக்கவில்லை காலை வேளையில் சரணடைவதற்காக புதுக்குடியிருப்பு பக்கமாக நகர்ந்தோம் சரமரியாக செல்வீச்சும் சன்னங்களும் வந்து கொண்டிருந்தன செல்கின்ற வழியெங்கும் பிணங்கள் ஏற்கனவே வெட்டப்பட்ட பதுங்குகுழிகளுக்குள் இருந்து இருந்து நகர்ந்தோம் இறுதியாக புதுக்குடியிருப்பு பக்கமாக இருந்த இறுதி எல்லையை எட்டிய பொழுது எதிர்பாராத விதமாக அப்பாவை சந்திக்க நேர்ந்தது அந்த இடம் அடுத்து ஒரு அபரிவிதமான யுத்தம் ஒன்றுக்கு தயாரன இடமாக ஏதோ ஒரு மாயம் குடிகொள்ளப்போகும் இடமென்பது உணரக்கூடியதாய் இருந்தது.
அப்பா உடனடியாக எங்களிடம் இருந்த அவரது புகைப்படங்களை எடுத்து கிளித்து எறிந்துவிட்டு உடனடியாக வட்டுவாகல் பக்கம் செல்லும் படி சொன்னார் சிறிது தூரம் தானும் வந்தார் வருகின்ற வழியில் திடீரென ஒரு ஆர்பியி எறிகணை வந்து வெடித்தது நாங்கள் சிதறி ஓட ஆரம்பித்தோம் சாரை சாரையாக ரவைகள் வர ஆரம்பித்தன ஓட ஆரம்பித்தோம். ஆனால் இன்று நான் ஒன்றை உணர்கிறேன் அப்பா தான் வரித்துக்கொண்ட சத்தியத்தின் மீது தீராத பற்றுதி கொண்டிருந்தார் அதே போல் எங்களுக்கும் அதை சரியாக தந்திருக்கிறார் அதனாலேயே என்னமோ அப்பாவை எங்களுடன் வரச் சொல்லி அம்மாவோ நானோ அழைத்து அப்பாவை தர்மசங்கடத்துக்குள் உள்ளாக்கவில்லை………
– மகன் –
==========================================================================================

மே 9,10ஆம் திகதி | வட்டுவாகல் பாலத்துக்கு கொஞ்சம் முன்னாலைதான். ஒரு 1கிமீட்டர் இருக்கும்.’

ஒரு மே 9, 10ஆம் திகதி போல ஒரு மாமரங்கள் நிறைந்த கூடலுக்கு கீழே இருத ஒரு பதுங்ககழி இவர்களின் புலிகளின்குரல் இயங்கினது. அந்த காப்பரணுக்குள்ளே ஒருநாள் பின்னேரம் போல உள்ளே சென்றனான். அதுதான் என்ர வாழ்க்கையில் புலிகளின் குரல் ஒலிபரப்பு கணத்தை நான் கண்ட முதல் நிகழ்வு.

காப்பரண் ‘ட’னாப்பட இருந்தது. முன்னுக்கு இருந்த வாசலில் ஒரு அக்கா இருந்து பாடல்களை ஒலிபரப்புச்செய்து கொண்டிருந்தவ. அவக்கு அங்காலதான் தவபாலன் மாமா இருந்தவர். அவரை அன்டைக்குத்தான் நான் முதன்முதலாகக் கண்டனான். அவர் கழுத்தில ‘headphone’ மாட்டியிருந்தவர்.

எனக்கு நல்ல ஞாபகம், நான் அந்த அக்காட்ட நீங்கள் ”கண்ணிவெடி கனவில் வருது” பாட்டுப் போடுவியளோ என்ட அந்த அக்கா சொன்னவ உந்தப் பாட்டை இப்ப போட்டா சனம் என்னை அடிக்கும் என்டு சொன்னவ.😆 நான் ஏன்னென்டு கேக்க, ஆமி வாற நேரத்திலை உந்தப் பாட்டையோ இப்ப போடுறது என்டு என்னை ஏசினவ. இதெல்லாம் மறக்க ஏலாத தருணங்கள்!

அந்த எறிகணை விழுந்த கூடாரத்துக்கு முன்னுக்கு இருந்த கூடாரத்திலைதான் நாங்கள் முதலிலை இருந்தனாங்கள். அது திறந்த வெளிப் பதுங்ககழி. ஒரு நாள் பின்னேரம், 9ம் திகதி என்டு நினைக்கிறன், இருந்தாப்போலை ஆமி எங்களுக்கு முன்னால இருந்த அந்தக் கூடாரத்துகு செல் அடிச்சு அந்தக் கூடாரத்துக்கு முன்னால ஒரு அம்மா தன்ர குழந்தை ஒன்றிற்கு, ஒரு ஒன்று அ ஒன்றரை வயது மதிக்கத்தக்கது, குளிச்சவாத்துக்கொண்டு இருந்தவ. அந்தக் குழந்தை குளிச்சுக்கொண்டு நின்ட பேசினுக்கு மேலையே அந்த அந்த எறிகணை வீழ்ந்து வெடிச்சதில அந்த குழந்தை துகளாகிப்போட்டுது. அம்மா அப்படியே சிதறிட்டார். அதிலிருந்து வந்த சிதறுதுண்டம் ஒன்று என்ர அம்மம்மாவின்ர காது மடலிலை ஏறிற்றுது. அம்மாக்கு காலிலை மற்றொண்டு ஏறினது. நல்ல காலம் ரண்டும் சரியான சின்னன் என்டதாலை நாங்களை அதைக் கையாலையே இழுத்து எறிஞ்சு போட்டு பக்கத்து பதுங்ககழிக்குள்ள போக முதலுதவி மருந்து கட்டிவிட்டவ, அதுக்குள்ள இருந்த அம்மாக்குத் தெரிஞ்ச ஒரு நேர்ஸ் அக்கா.

அதுக்குப் பிறகுதான் அந்தக் காப்பரணுக்குள்ள போனன்னாங்கள். அதுக்குள்ள ஏற்கனவே மூண்டு குடும்பம் இருந்தது. நெருக்கம்தான். செல்லுக்கு மட்டும் உள்ளுக்குப் போறனாங்கள். மற்றும்படி வெளியிலைதான் இருந்தனாங்கள், சரியா அன்டும் அடுத்தநாள் பின்னேரம் வரைக்கும். பேந்து அந்த இடத்தை விட்டு நாங்கள் வேறொரு இடத்துக்குப் போயிற்றம். அந்த ஒற்றையடிப் பாதைக்குள்ளாலை நகர்ந்து பின்னாலை இருந்த ஒரு வடலி கூடலுக்குப் பக்கத்திலை போயிருந்தனாங்கள்.  இடம்பெயரேக்கிலதான் நான் ஜவான் மாமாவைவும் பாத்தனான். இடுப்பிலை பிஸ்டல் கட்டிக்கொண்டு நிண்டவர்.

  • நன்னிச் சோழன்-Yarl.com
மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

முள்ளிவாய்க்காலில் வீரவரலாறான அன்பரசன்

அன்பரசன் (லோறன்ஸ்) அவர்கள் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறிலங்கா அரசு தமிழர்கள் மீதும், தமிழர் தாயகத்தின் மீதும் காலத்திற்குக் காலம் ...

Leave a Reply