Home / மாவீரர்கள் (page 3)

மாவீரர்கள்

லெப்ரினன்ற் கேணல் பூவேந்தன்

1999 ஆரம்ப காலம் ஜெயசிக்குறு சிறிலங்கா இராணுவ நடவடிக்கை ஊடாக இராணுவம் ஒட்டுசுட்டான் சந்தி வரை வந்திருந்தது அப்போது புதுக்குடியிருப்பு வேணாவில் அமைந்திருந்த புலிகளின் படைக்கல பாதுகாப்பு அணியின் முகாமிலிருந்த போராளிகள் இரவு பகலாக தொடர்ந்து படைக்கலங்களை இறக்கி களஞ்சியப்படுத்தி கொண்டுயிருந்தனர். அந்நேரம் கடற்புலிகள் தங்களின் தாக்குதல் பலத்தால் சிங்கள கடற்படையை மீறி சர்வதேச கடற்பரப்பிலிருந்து ஆயுதங்கள் அவற்றுக்கான செல்கள் ரவைகள் மற்றும் போராளிகளுக்கு தேவையான உலர்உணவுகள் உடைகள் அனைத்தையும் ...

Read More »

லெப்.கேணல் ஞானழகன்

01/04/1995 ஆம் ஆண்டு தனது பதினாறு வயதில் தமிழீழ இலட்சியத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து மட்டக்களப்பிலிருந்து 18/04/1995 யாழ்மாவட்டம் எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் அமைந்திருந்த கப்டன் ஜெயந்தன் படையணி முகாமிற்கு வந்து சேருகிறான். அதன்பின் 28/05/1995 தொடக்கம் 28/10/1995 வரை லெப்.கேணல் பொன்னம்மான் ஆரம்ப பயிற்சி 06 தனது அடிப்படை பயிற்சியை நிறைவு செய்கிறான். பயிற்சியில் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டதால் சிறுத்தை படையணியிற்கு உள்வாங்கப்பட்டு சிறுத்தை விசேட ...

Read More »

போரிற்கு தனது மகளை வழியனுப்பும் ஈழத்து தகப்பன் – இன்றும் சாட்சியாய்!

இன்று எனது அக்கா வீரச்சாவு அடைந்த நாள் 26/04/2009 எனது அக்கா வீரச்சாவடைந்தது பற்றி எனது நினைவில் பின்நேர பொழுது நான் அம்மாவும் முள்ளிவாய்களில் எமது இருப்பிடத்தில் இருக்கையில் அப்பா திருமாஸ்டர் ,திருமாஸ்டரின் மனைவி (டீச்சரும்) பதட்டமான வருகை என்னப்பா என்ன நடந்தது என்று அம்மா கேக்க அக்காவின் வீரச்சாவு செய்தியை எடுத்து வந்தனர் அனைவரும் எங்கள் குடும்பத்தில் இரண்டாவது இழப்பு 07.04.2009 அன்று எனது அண்ணா எறிகணை தாக்குதலில் ...

Read More »

படைத்துறைச் செயலக ஆளுமை கேணல் மனோ மாஸ்ரர்

மனோ மாஸ்டர் 1983 இல் தமிழீழ விடுதலைப் போரில் தன்னை இணைத்துக் கொண்டவர். இந்திய மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சிபெற்ற அவர் அங்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறைச் செயலகத்தில் பணியாற்றினார். இந்திய படையினரின் ஆக்கிரமிப்பு நாட்களில் மணலாற்றில் பயிற்றுவிப்பு செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.1989 இல் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியங்களில் படைத்துறை பயிற்சி நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

Read More »

மூத்த தளபதி மாதவன் மாஸ்ரர்

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் ஆரம்பகால பொறுப்பாளருமாகிய, மாதவன் மாஸ்டர் அவர்கள் 2009 முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் வீரச்சாவடைந்துள்ளார். தலைவர், பொட்டமான், மாதவன் மாஸ்ரர் என குறிப்பிடும் அளவிற்கு புலனாய்வுத்துறையின் வளர்ச்சியிலும் அதன் முன்னேற்ற கட்டுமானத்திலும் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More »

காத்திருந்து பகையின் கதை முடித்த மறைமுகக் கரும்புலி லெப் கேணல் சோழன்!

சிறுகக்கட்டிப் பெருகவாழும் வீடுகளில் விருந்தோம்பி வரவிருந்து காத்திருக்கும் பண்பாடுமாறாத மனித உள்ளங்கள். தமிழீழ சுதந்திரப்போருக்காயப் பிள்ளைகளை அனுப்பி வைத்த வெற்றிக்காய்க் காத்திருக்கும் வீரமிகுதாய்க்குலம். இவையெல்லாம் தமிழனின் இருப்பு இன்னும் அழிந்துவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டும். மண்ணை நம்பி வாழ்ந்திருக்கும் இந்தமக்கள் தங்கள் மண்ணை சிங்கள ஆக்கிரமிப்பில் பறிகொடுத்துவிட விருப்பில்லை மண்ணை மாத்திரமல்லாது தங்கள் வாழ்வின் அடித்தளமாய் விளங்கும் பண்பாட்டையும் இழந்துவிடத்தயாரில்லை.

Read More »

தடங்கள் தொடர்கின்றன…

தனது 50 கலிபர் சுடுகலன் அணியில் தான் உட்பட எல்லோருமே காயமடைந்து, சிலர் வீரச்சாவடைந்துவிட, அந்தக் கணத்தில் – 50 கலிபர் சுடுகலனைப் பாதுகாக்க வழியற்றுத் தவித்துப்போனார் கப்டன் இசைநிலா. நகரவே முடியாத காயம். எனினும் குற்ற உணர்வு உறுத்திக்கொண்டிருந்தது. அந்தச் சுடுகலனை நகர்த்துமாறு இசைநிலா கத்திக்கொண்டிருந்தார். 2006.08.11 அன்று யாழ் மாவட்டத்தின் முகமாலை, கிளாலிப் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சியை முறியடித்து விடுதலைப்புலிகளின் அணிகள் முன்னேறிவிட்டிருந்தன.

Read More »

கடற்கரும்புலிகள் மேஜர் நவநீதன் கப்டன் தோழன் ஆகியோரின் தியாகம்

சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எமது கப்பல்களில் ஒன்றை 10.03.1999 அன்று காலை இந்தியக் கடற்படை பின் தொடர்ந்தது. இதனை கப்பலிருந்தவர்கள் அவதானித்து இத்தகவலை தமிழீழத்திற்க்கும் சர்வதேசத்தில் இருந்த சர்வதேசப் பொறுப்பாளருக்கும் தெரியப்படுத்தினர். அவர்களும் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தனர். இந்திய கடற்படையோ சரணடையும்படி தொலைத்தொடர்புக்கருவியூடாக அச்சுறித்துக் கொண்டேயிருந்தது மட்டுமில்லாமல் இடைக்கிடையே துப்பாக்கிச்சூடும் கப்பலுக்கு அண்மையாக நடாத்திக்கொணடிருந்தனர். சரணடைவது விடுதலைப் புலிகளின் மரபல்ல அதுமட்டுமன்றி இயக்கத்தின் மூத்த ...

Read More »

உகண விநியோகக் கப்பல் முழ்கடிப்பும் வீரகாவியமான கரும்புலிகளும்

26.06.2000 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் யாழ் குடாநாட்டு சிறிலங்கா படையினருக்கான ஆயுத – தளபாட வெடிமருந்து ஏற்றிச் சென்ற ‘உகண’ விநியோகக் கப்பல் முழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின்  24 ம் ஆண்டு வீரவணக்க நாள் ...

Read More »

கடற்கரும்புலி லெப் கேணல் அன்புமாறன் – ஒரு நினைவுப் பகிர்வு

இன்று கரும்புலிகள் நாள்.என்னுடைய பாடசாலைக்கால நண்பன் சுபாஸ் (கடற்கரும்புலி லெப் கேணல் அன்புமாறன்) பற்றிய ஒரு நினைவுப்பகிர்வு. புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் ஜோன் கல்வி இயங்கிக்கொண்டிருந்தது. 2000 ஆண்டு எனது பாடசாலையில் உயர்தரத்திற்கு ஆசிரியர் பற்றாக்குறை. பற்றாக்குறை என்று சொல்வதை விட ஆசிரியர்கள் இல்லை. இதனால் நானும் என் சக மாணவர்களும் தனியார் கல்வி நிலையத்தையே நம்பியிருந்த காலம். சுபாஸ் ஜோன் கல்வி நிலையத்தில் எனது வகுப்பில் படித்தான். நான் ...

Read More »