2006 மார்கழி 4 ஆம் நாள், நீயும் நானும் சந்தித்த முதல் நாள். நீ உயரமானவன் என்பதால் அந்த கல்லூரியின் பின்வரிசையையே ஆக்கிரமிப்பாய். முதன்நாளிலும் அப்படித்தான். மெல்லிய நீல கோடு போட்ட சேட் என்று நினைக்கிறேன். உன் புன்னகையை ஒரு தடவை பார்த்துவிட்டு முன்னாலே புரொஜெக்டரின் ஊடக வெளிவந்து வெண்ணிற திரையில் ஒளிர்ந்து கொண்டிருந்த கற்றலுக்கான எழுத்துக்களை பார்த்தேன். முதல் நாள் எந்த அறிமுகமும் இல்லை. மணிவண்ணன் உன் பெயர் …
Read More »மேஜர் செஞ்சேரன்
செஞ்சேரா…(சுந்தரலிங்கம் அகிலன்)நீ எங்களின் நீலக் கடலில் சாதித்தவன். உன்னை அறிமுகம் இல்லாத கடற்புலிகள் மிகக் குறைவென்றே நான் நம்புகிறேன். ஏனெனில் அப்படித்தான் உன் பணி இருக்கும். நிர்வாக போராளியாக இருந்த நீ படிப்படியாக ஒரு பொறுப்பாளனாக உயர்ந்ததை யாரும் மறக்க மாட்டோம். 1996 மல்லாவி மண்ணுக்கு நானும் நீயும், எனது குடும்பமும் உனது குடும்பமும் இடம்பெயர்ந்து வந்தோம். உனது தம்பி ( சித்தியின் மகன்) எனது நெருங்கிய தோழனாகிய போது …
Read More »கிளிநொச்சி நகர் – நினைவுக்கல்
எமது அடுத்த சந்தததியினருக்கு வரலாற்று ஆவணங்களாக எடுத்துக்காட்டும் நினைவுக்கட்டுமாணங்கள் யாவும் எமது தேசவிடுதலையின் ஆவணங்களை ஆதாரத்தோடு வெளிப்படுத்தும். இவ்வாறு நேற்றுக்காலை 9.30 மணிக்கு கிளிநொச்சிகுளச் சந்தியில் தமிழீழ அரும் பொருள் காப்பகத்தினால் அமைக்கப்பெற்ற மாவீரர் நினைவுத்தூபி நில மீட்பு கல் வெட்டு திரைநீக்கம் தமிழீழ அரும்பொருள் காப்பகப் பொறுப்பாளர் ஆதித்தவர்மன் தலைமைவகித்து உரை நிகழ்த்துகையில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ்த் தேசிய புனிதநாளில் எமது தேச விடுதலையின் அத்திவாரங்களான …
Read More »மறைமுக கரும்புலிகள்
இவர்கள் யார்? உங்களுக்காக தங்களை மறைத்தவர்கள். இதுவரை எதிரிகள் கூட அறியாததை இனி நமது மக்கள் அறியட்டும். தமிழினத்தின் விடுதலைக்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்த பல்லாயிரம் வேங்கைகள் இருக்கின்றனர். ஈழப் போர் தோல்வியுறும் வரையில் அந்தப் பரித்தியாகிகளில் பல்லாயிரக்கணக்கானவர்களின் முகங்களை மக்கள் அறிந்திருக்கின்றனர். ஒவ்வொரு மாவீரர் தினத்தின் போதும் தங்களுக்காக வீழ்ந்தவர்களை மக்கள் அறிந்து கொண்டனர். வணங்கினர். ஆனால் இரகசிய நடவடிக்கைகளின் போது தங்களை தியாகம் செய்த நூற்றுக் …
Read More »லெப். கேணல் அர்ச்சுணன் வீரவணக்க நிகழ்வு
லெப். கேணல் அர்ச்சுணனின் (இளையதம்பி கதிர்ச்செல்வன்) இறுதி வணக்க நிகழ்வு 20-04-2007
Read More »கடல்புலிகளின் கப்பல்கள் – ஒரு தொகுப்பு
தொகுக்கப்பட்டவை – நன்னிச்சோழன் 1. எம்.வி. கொரிசோன் (Horizon) சம்பவம் நடைபெற்ற திகதி: 13 பெப்ரவரி 1996 முல்லைதீவுக்கு உயர சரியாக 26 கடல்மைலில் வைத்து இந்திய – இலங்கைக் கடற்படைகளுடனான முற்றுகைச் சமரின் போது சிங்கள வான்படையால் மூழ்கடிக்கப்பட்டது.
Read More »லெப். கேணல் சலீம்/கலாத்தன்
ஆழ்கடல் வழங்கல் நடவடிக்கைகளிற்கு கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான லெப். கேணல் சலீம்/கலாத்தன் என்பவர் தலைமை தாங்கினார். இவர் 4 மார்ச், 2009 அன்று கடற்புலிகளின் தளமிருந்த சாலை பகுதியில், சிங்களப்படைகளின் பதுங்கித் தாக்குதலின்போது காயமடைந்து பண்டுவம் பெற்றுவரும் வேளையில் 10 மார்ச் 2009 அன்று வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார்.
Read More »லெப். கேணல் நவநீதன்
ஒரு உண்மை வீரனின் கதை நவநீதனைப்பற்றிச் சொல்வதானால் சண்டையில் தான் ஆரம்பிக்க வேண்டும்; சண்டைகளால் தொடர வேண்டும்; சண்டையொன்றில் முடிக்க வேண்டும். அவனது சண்டைகளை விளக்குவதன் மூலம் தான் அவனை வர்ணிக்க முடியும். அந்தளவுக்கு சண்டைக்களங்களிலேயே அவனது வாழ்வு உருண்டோடியது; சண்டைக்களங்களிலேயே அவன் தூங்கி விழ்த்தான்.
Read More »தாயகத் தந்தை
குறிப்பு: தாயகத் தந்தை எனும் இக்காவியத்திற்காக கானக வாழ்வின்போது விடுதலைப் போராட்டத்திற்கும், தேசியத் தலைவர் அவர்களிற்கும், போராளிகளுக்கும் உறுதுணையாக் இருந்த லெப். கேணல் நவம் அவர்களின் தந்தையின் அன்றைய கானக வாழ்வில் போராளிகளுடன் இருக்கும் நிழலாடும் நினைவுகளை இணைக்கின்றோம்.
Read More »கரும்புலி கப்டன் புரட்சி – நினைவுப் பகிர்வு
05.07……ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகளில் அவனும் ஒருத்தனாக எமக்கும் தெரியாமல் தன்னை இணைத்துக்கொண்டான் .அதன் பிறகு உலகறிய வெற்றி நாயகனானான். எனது பத்து வயதுவரை அவனுடன் ஒன்றாக படித்தேன்.
Read More »
EelamHouse A place for Eelam history documents