Home / ehouse (page 8)

ehouse

தென்தமிழீழ போராளிகளுடன் தலைவரின் நெருடலான சந்திப்பு!

போர் நிறுத்த உடன்பாடு செய்யப்பட்ட நிலையில் தென்தமிழீழத்திற்கு விடுமுறையில் செல்லும் போராளிகளை சந்தித்த தமிழீழத் தேசியத்தலைவர் பல கருத்துக்களை போராளிகளுடன் பரிமாறிக்கொண்டார். அவற்றில் முக்கியமானவை: 1. 18வயதும் அதற்கு மேற்பட்டவர்களே இயக்கத்தில் இணைக்கப்படவேண்டும். 2. தமிழ்பேசும் மக்களாகிய முஸ்லிம் மக்களுடன் பழைய சம்பவங்களை மறந்து நெருக்கமான உறவை பேணவேண்டும் 3. மாறிவரும் சர்வதேச உலகில் சர்வதேச நடைமுறைகளுக்கு அமைவாக மாற்றிக்கொள்ளவேண்டும். தலைவர் மேதகு வே. பிரபாகரன் உரை from Karthick ...

Read More »

நீங்காத நினைவலைகளில் எங்கள் கிளி பாதர்

வன்னி மக்கள் அனைவராலும் கிளி பாதர் என செல்லமாக அழைக்கப்படும் கருணாரட்ணம் அடிகளார் மல்லாவி வவுனிக்குளம் , வன்னிவிளாங்குளம் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டு இன்றுடன் (20.04.2008) 10 வருடங்கள் நிறைவடிகிறது மிகுந்த வேதனை ஒருபுறம் இருந்தாலும் அவரின் பணிகளை நினைக்கும் பொது அவற்றை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய சூழலில் நாம் இன்று இருக்கிறோம் அவர் ஒரு பங்கு தந்தையாக குறிப்பிட்ட ...

Read More »

மாமனிதர் ஞானரதன் (சச்சிதானந்தசிவம்)

மாமனிதர் ஞானரதன் மே 22, 1940- ஜனவரி 18,2006, அளவெட்டி, யாழ்ப்பாணம், இலங்கை. ஈழத்து ஓவியர், எழுத்தாளர். குறும்பட இயக்குனர். இவர் சிறந்த எழுத்தாளராகவும், ஆற்றல் மிக்கதொரு கலை இலக்கியப் படைப்பாளியாகவும், சிறந்த அரசியல் சிந்தனையாளராகவும் திகழ்ந்தவர். பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் ஓய்வில்லாமல் எழுதிக் கொண்டிருந்தவர். நிதர்சனம் நிறுவனம் தயாரித்த பல விவரணங்கள், குறும்படங்கள், முழுநீளப்படங்களின் மூலகர்த்தா. ஒளிவீச்சு சஞ்சிகையின் தொடக்குனர்களில் ஒருவர். தமிழீழத் தேசியத்தொலைக்காட்சியை ஆரம்பிப்பதில் முன்நின்றவர்களில் ஒருவர். சிங்கள ...

Read More »

மாமனிதர் நாவண்ணன்

மாமனிதர் கவிஞர் நாவண்ணன் நினைவுகள்… இவர் 1948 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் பிறந்தார் தனது இளமை வாழ்க்கையை யாழ். இளவாலையிலே தொடங்கினார். ஒரு கவிஞனாக உருவெடுத்த நாவண்ணன், எமது மக்களுக்குள் எழுந்த ஈழ விடுதலையின் சுவாலையை வீறுகொண்டு எரிய வைக்க கவிதை வடிவிலும் பாடல்கள் வடிவிலும் நகைச்சுவை வடிவங்களிலும் தன் வரிகளை எழுதினார். எதிரியின் யாழ். மீதான ஆக்கிரமிப்பால் வன்னி வந்த இவர் வன்னியில் எதிரியின் படையை விரட்டிப் ...

Read More »

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்

நத்தார் தினத்தன்று இரவுத் திருப்பலியிற் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் திருப்பலியில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மனைவியுட்பட மேலும் எழுவர் காயமடைந்தனர். இவர் தீவிர விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று அறியப்படுபவர் தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது. பைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் ...

Read More »

மாமனிதர் சிவராம்

தமிழ் ஊடகப்பரப்பில் நிரப்பப்பட முடியா வெற்றிடம் ‘தராக்கி’ சிவராம். ஈழத்து ஊடகப் பரப்பில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பை தாம் சார்ந்த சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் வழங்கியுள்ள போதிலும், சிவராமுக்கு இணையாக எவரும் இல்லையென்றே கூறுமளவிற்கு அவரது வெற்றிடம் அவர் எமைவிட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இன்னமும் நிரப்பப்படாமலேயே உள்ளது. தனது சொந்த நலத்தைப் பொருட்டாக மதிக்காமல் தான் சார்ந்த சமூகத்தின் நலத்தைப் பெரிதாகக் கருதிச் செயற்பட்டமையினாலேயே அவர் ...

Read More »

மாமனிதர் குமார் பொன்னம்பலம்

சிங்கத்தின் குகையில் அரசோச்சிய புலிக்குரல்… ‘இரண்டாயிரமாவது ஆண்டு முடியும் வரை என்னை உயிருடன் விட்டுவைப்பார்களோ தெரியவில்லை’ என்று கூறிய திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் மறைந்து. ஓராண்டாகிவிட்டது. (2001ம் ஆண்டு வரையப்பட்டது) அவரின் நினைவுகளை ஒரு கணம் மீட்டுப் பார்ப்போம். 05.01.2000 அன்று கொழும்புநகரில், அவரது மோட்டார் வண்டிக்குள் வைத்து, கயவன் ஒருவன் தன் கைத்துப்ப்பாக்கியை இயக்கி, ஐந்து குண்டுகளை அனுப்பி குமார் பொன்னம்பலத்தில் உயிரைக் குடித்தான். சிங்களப்பேரினவாதிகளின் தமிழர் ...

Read More »

மாவீரன் சுகுமார்

தமிழீழத்தின் வளம்மிக்க கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுர கிராமத்தில் இராசு ரட்ணசிங்கமாக 09/01/1980 ஆண்டு மூன்று சகோதரிகளுக்கு தம்பியாக பிறந்தான் மிகவும் செல்லமாக வளர்ந்து வந்தான் அவனது சிறுவயதில் தந்தை இறந்துவிட தாயார் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பிள்ளைகளை படிக்கவைத்து வளர்த்து வந்தார் இவனை எல்லோரும் சுதா என்றே அழைத்துவந்தனர் பாடசாலை கல்வி கற்றுவந்த வேலையில் யாழ்ப்பாணத்தை சிறிலங்கா படைகள் ஆக்கிரமித்ததன் விளைவாக பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து வன்னியில் குடியேறியிருந்தனர் அதன்படி ...

Read More »

தமிழீழத் தேசியத் தலைவர் கல்விமேம்பாட்டுநிதியம்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஐம்பதாவது பிறந்தநாளையொட்டிக் கல்விமேம்பாட்டுநிதியம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். ஆண்டுதோறும் ஒரு கோடி உரூபா இந்நிதியத்திற்கு ஒதுக்கப்படும். எம்மால் நடத்தப்படும் தமிழ்மொழித் திறன்தேர்விலும் பொதறிவு மற்றும் உளச்சார்புத் தேர்விலும் சிறந்த பெறுபேறு பெறுவோருக்கு இந்நிதியத்திலிருந்து காசுப்பரிசில்கள் வழங்கப்படும். தமிழீழத்தில், க.பொ.த (சா/த) தரத் தேர்விற் சிறந்த பெறுபேறுகளுடன் தேறி நிதிவாய்ப்பின்மையால் தொடர்ந்து கற்கமுடியாத மாணவருக்கும் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்வதில் நிதிச்சிக்கல்களை எதிர்நோக்கும் மாணவருக்கும் ...

Read More »

கவச அணி நாயகன் லெப் கேணல் சிந்து

யாழ்ப்பாணம் அரியாலை ஆனந்தன் வடலி வீதியில் மயில்வாகனம் திலகவதி தம்பதிகளுக்கு 1975 ஆம் ஆண்டு யூன் மாதம் 29 அன்று ஆறாவது புதல்வனாக பிறந்தவன் தான் லெப் கேணல் சிந்து. இவனது இயற்பெயர் தயாளன். இவன் ஆரம்பக் கல்வியை அரியாலை ஸ்ரீபார்வதி வித்தியாசாலையில் பயின்று வந்தவன், இளமைக்காலத்தில் கல்வியில் கணிசமாகவும், விளையாட்டில் மிகச்சிறந்தும் விளங்கினான். இவன் பாடசாலை இல்ல விளையாட்டுகளிலும் சரி, கழக விளையாட்டுக்களிலும் சரி தனது தனித்திறமையை வெளிக்காட்டினான். ...

Read More »