Home / ehouse (page 8)

ehouse

லெப். கேணல் விக்கீஸ்வரன்

ஆளுமை, பணிவு, வேகம், செயற்றிறன், துணிவு குறிப்பறிந்து பணி செய்யும் ஆற்றல் மிக்க ஒரு விடுதலை வீரன். லெப். கேணல் விக்கீஸ்வரனின் வீரவணக்க நிகழ்வில் செ.யோ.யோகி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து… இவர் 1991 இன் இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார். 1992, 1993 ஆம் ஆண்டுகளில் பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1994 இல் இருந்து 1996 வரை எதிரி பற்றிய தகவல் சேகரிப்பில் ஈடுபட்டார். இவர் பெரும்பாலும் ...

Read More »

வரலாற்றைப் படைத்தவன்

உலகில் தற்போது புழக்கத்திலிருக்கும் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பேசும் தமிழினத்திற்கென்று மிக நீண்ட வரலாறு உள்ளது. தமக்கான இறைமையைப் பேணி தம்மைத் தாமே ஆண்டும் நிர்வகித்தும் தனித்துவமான பண்பாட்டைப் பேணியும் வந்த தமிழினம் ஆதிமுதல் வாழ்ந்துவந்த நிலப்பகுதிகளில் இலங்கைத்தீவும் ஒன்று. காலச்சூழலில் அன்னியப் படையெடுப்புக்களால் தமிழரின் இறைமை பறிபோகத் தொடங்கியது. பேரரசுகள், சிற்றரசுகள் என அனைத்தும் படிப்படியாக வீழத் தொடங்கின. இறுதியில் தமிழினம் முழுமையாகவே ஆட்சிப்பரப்பற்ற நிலையில் ...

Read More »

கப்டன் முத்துசாமி – லெப். சுதர்சன்

உரிமைப் போரில் உணர்வுடன் கால்பதித்த, பொறியியல் பீட மாணவன் கப்டன் முத்துசாமி, மருத்துவ பீட மாணவன் லெப். சுதர்சன். தமிழ்த்தேசியஇனத்தின் இழந்த தாயக மீட்பிற்கான போராட்டத்தின் கண்ணுக்கெட்டிய கால இடைவெளியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உட்பட்ட எமது மக்களை இழந்திருக்கின்றோம்.ஒவ்வொருவருடைய இழப்பும் எமக்குப் பேரிழப்பாகயிருந்தபோதும் விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியில், எமது இளைய தலைமுறையினர் வாழ்வும் வளமும் எதிர்காலத்தில் எமது இனத்தின் தனித்துவத்தோடு அமைந்ததாக இருக்குமென்ற எண்ணம் எமது மக்களையும் ,இளையோர்களையும் போராட்டத்தின்பால் ...

Read More »

வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர்

வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை விடுதலை வரலாற்றில் பலருக்கு விலாசம் இருந்ததில்லை விளம்பரம் இருந்ததில்லை முகம் இருந்ததில்லை முகவரி இருந்ததில்லை. ஏன் அவர்களது முடிவுகள் கூட யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் அவர்களின் ஆளுமையின் இயங்கு சக்தி மட்டும் என்றென்றும் உயிரோடு வாழ்ந்து பல்லாயிரம் பேரை இயக்கிக் கொண்டிருக்கும் பெரும் தீயாகி வியாபித்திருக்கும். இத்தகைய அடையாளங்களுக்குச் சொந்தக்காரனாக இருந்த ஒருவர் றட்ணம் என்ற இயக்கப் பெயரைக் ...

Read More »

வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் !

‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் லெப்.கேணல்.சிரித்திரன். வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் சிரித்திரன் பெயரைப் போலவே சிரித்த முகம். வீரத்தை விழிகளில் சுமந்த விசித்திரம் அவன். தமிழீழ வான்புலிகள் சரித்திரத்தில் சிரித்திரனும் ஒரு விடி நட்சத்திரம். விடிவெள்ளிகளின் ஒளிக்கதிர்கள் பார்வையில் சிறுபுள்ளயே. எனினும் அதன் வீரியம் என்பது உலகைவிடவும் ஒளிபொருந்தியது. அப்படியே எங்கள் சிரித்தினும் வீரத்தின் ...

Read More »

மேஜர் ஈழமாறன்& மேஜர் கஜன்

அந்தத் தாயவளுக்கு இவர்களும் ஓர் பிள்ளை, இவர்கள் அரசியலில் பணிகள் தேசத்தின் விடியலின் தாகத்துடன் பயணித்த போதும் இவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்தவள் ஓர் போராளியின் தாயவள்!!! அன்று கூறினார் அந்தத் தாய்….. என் கருவில் சுமக்கவில்லை ஆயினும் தினம் தினம் என்னை அம்மா என்று அழைத்தவர்கள் இவர்கள் அதனால் என் உள்ளம் மகிழ்ந்தது….. காலத்தின் தேவை உணர்ந்து இன்று வரலாறாக…, மாவீரர் நடுக்கற்களாக….., ஏனோ என் நெஞ்சம் அவர்களின் ...

Read More »

உறுதியின் வடிவம்

அம்பாறையில் நிந்தவூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் செல்வன் பொறிவெடி செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த இவர் தவருதலான ஒரு வெடிவிபத்தின்போது தன் இரு கைகளையும் – இரு கண்களின் பார்வையையும் இழந்தவர். தற்போதைய நிலையில் ( 1992 காலப்பகுதி ) வட – தமிழீழத்தின் பல பகுதிகளில் பிரச்சார வேளைகளில் ஈடுபட்டிருக்கும் அவரை , உங்களுக்கு அறியத்தருகின்றோம். விடுதலையின் சுவடாக ….. 1985 ” என்ரை காலை எடுத்துப்போட்டினம் அண்ணை ” ...

Read More »

தமிழீழ மக்களுக்கு கரும்புலி வீரர் மடல்

அன்பான மக்களே! வெற்றி பெற்று வாழ போருக்குத் தயாராகுங்கள் நம்பிக்கையுடன் வெடிக்கின்றேன். அன்புக்கினிய எம் தாய்நாட்டு உறவுகளே வணக்கம்! எங்கள் மக்களின் துன்பம் கண்டு துவண்டு கரும்புலியான எனது உணவுர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். அன்பானவர்களே! உங்களின் வாழ்விற்காக, இருப்பிற்காக எனது உயிரைக் கொடையாகக் கொடுப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். எமது இனத்தைச் சிங்கள தேசம் அழிக்கத் துடிப்பதை நினைக்கும் போதுதான் இன்னும், இன்னும் பல பிறப்பெடுத்து எமது இனத்தின் விடிவிற்காக ...

Read More »

களத்தில் ….

இனப்பற்று ஆனையிறவுச் சமரில் ஈடுபட்ட பெண் போராளிகளை , கலை பண்பாட்டுக் கழக தலைமையகத்தில் கலைஞர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். சண்டை தொடர்பாக பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். கதைத்து முடித்தபின் – ஒரு நிலையில் …. ஒவ்வொரு போராளியாக அவர்களை இயக்கத்துடன் இணையவேண்டும் என்ற என்ணத்தை விளைவித்த காரணிகளைப்பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்கள். பெண் போராளிகளும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். சூரியா என்றொரு பெண் போராளி , தனது தலையையும் , கையையும் அடிக்கடி அசைத்தபடியே ...

Read More »

போராளியின்யின் குறிப்பேட்டிலிருந்து…

இந்த இயந்திரத்தால் நகைச்சுவையுடன் போராளிகளின் மனதை நிறைத்து பொறுப்பாளரின் ( ஆசான் ) கண்டிப்பையும் பெற்ற போராளி சிறு குறிப்பு. இவ் இயந்திரம் சண்டைப்படகுகளிலும் , விநியோகப்படகுகளிலும் ( உள்ளிணைப்பு இயந்திரமாக ) பயன்படுத்தப்பட்டது. கடற்புலிகளில் பல பிரிவுகள் அதில் ” சதீஸ் இயந்திரவியல் ” ( டோறா ரிம் – டிசல் இயந்திரம் ) என சில ஆண் – பெண் போராளிகளுக்கு இயந்திர பயிற்சிகள் அளிக்கப்பட்டன. எம் ...

Read More »