எந்தப்படகு வெள்ளோட்டம் விடவேண்டும் என்றாலும் முதலில் உச்சரிக்கும் பெயர் இவனுடையதுதான்.
மிராஜ் வகைப் படகுகள் கட்டுமானத்தில் அதன் வெள்ளோட்டத்தின்போது அதில் எத்தனை போராளிகளை ஒரேதடவையில் ஏற்றிவரமுடியும் என தலைவர் பரீட்சித்துப்பார்க்கும்படி கூறியிருந்தார்.முதலில் 30 போராளிகளை ஏற்றிக்கொண்டு ஓடிப்பார்த்து பின்னர் மேலும் முப்பது போராளிகளை ஏற்றிப்பார்த்து ஓடிய எழிற்கண்ணன் ஒரேதடவையில் ஒரு போராளி தனது உடமை மற்றும் தனது சிறியரக AK வகை ஆயுதம் உட்பட மொத்தமாக நாற்பது போராளிகளை ஏற்றியெடுக்க முடியும் என பரிந்துரைத்தான்.
![116648866_2348213962140149_2316908195554386898_n](https://eelamhouse.com/wp-content/uploads/2020/12/116648866_2348213962140149_2316908195554386898_n.jpg)
முதன்முதலில் ஸ்ரெல்த் எனப்படும் சிறிய வேகப்படகுக்கான வெள்ளோட்டத்தை செய்து இவன் கொடுத்த தரவுகளையே தலைவருக்கு அனுப்பி வைத்தோம்.
அதுதான் எழிற்கண்ணன்.
பின்னாளில் அவன் ஒரு படகு கட்டளை அதிகாரியாகவும்,
பொறியியலாளனாகவும்,அதன்பின் படகு கட்டுமானத்துறை பொறுப்பாளனாகவும்
அதன் பின்னர் மன்னார் மாவட்ட கடற்புலிகள் தளபதியுமாகவும் உயர்ந்து விளங்கினான்.
அந்தவீரனை போர்க்களத்தில் கொல்லமுடியாத சாவு வாகன விபத்தில் கொன்றுபோட்டது.
வீரவணக்கம் மாவீரனே.
(சமூக வலையிலிருந்து ஆவணப்படுத்தலுக்கான பதிவு )