Home / மாவீரர்கள் (page 7)

மாவீரர்கள்

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப் கேணல் வீரமைந்தன்

கிளிநொச்சி மாவட்டம் கோணாவில் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மங்களேஸ்வரன் என்ற இளம் மாணவன் தாயக விடுதலையில் வேட்கை கொண்டு, 1998 ம் ஆண்டு துவக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான். அடிப்படைப் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வீரமைந்தன் என்ற இளம் போராளியாக கடற்புலிகளில் இணைக்கப்பட்டான். விசேட பயிற்சிகளை பெற்றுக் கொண்ட வீரமைந்தன் , புங்குடுதீவு சிறிலங்கா கடற்படை மீதான தாக்குதலில் தனது கன்னிச் சமரை தொடங்கி திறமுடன் செயற்பட்டான். ...

Read More »

கடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்

1991ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்புக்கள் இராணுவத் தாக்குதல்கள் காரணமாக விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தியாகன். கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சி முகாமான மாவீரரான மேஜர் யப்பான் நினைவாக அவரது பெயரில் உருவான ‘யப்பான் 02’ல் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து; மேலதிக பயிற்சிக்காக கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்கு செல்கிறான். அங்கு படிப்பிலும் விளையாட்டிலும் குறிப்பாக தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட வகுப்பிலும் சிறந்து விளங்கினான். ...

Read More »

லெப். கேணல் மறவன் மாஸ்ரர்

தமிழீழத் தேசத்தின் விடுதலை வேள்வியில் விதையாகிப்போன ஆயிரமாயிரம் மாவீரர்களின் வரலாற்றுத்தடங்களில்கடற்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப் கேணல் மறவன்மாஸ்ரர் அவர்களின் வரலாற்றுப்பதிவும் தனித்துவமான அத்தியாயமாகப் பதிவாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியில் கடற்புலிகள் படையணி எத்தகைய முக்கியத்துவம் வகித்ததோ அதே போல் கடற்புலிகளின் வளர்ச்சியிலும் கடற்புலிகளின் அரசியல்த்துறையின் விரிவாக்கத்திலும் லெப். கேணல் மறவன் மாஸ்ரர் முதன்மையான பாத்திரம் வகித்தவர். அத்துடன் கடற்புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான நெருக்கமான உறவுப் பாலத்தைக் கட்டி வளர்ப்பதிலும் ...

Read More »

லெப்.கேணல் அன்புமணி(திவாகர்)

நான் நடுராத்தியில் பல தடவை நித்திரையில் இருந்து எழுப்பியிருக்கின்றன். எந்தவித சலிப்பின்றி அவரே வந்து வேலை செய்து தருவார். பிரின்ரர் சிலவேளைகளில் வேலைசெய்யாமல் இருக்கும், சிலவேளைகளில் ரோணர் பிரச்சினையாக இருக்கும், உடனயாடியாக அன்புமணி அண்ணையிடம் ஓடிபோனா காணும், வேலை முடிஞ்சதிற்கு சமன். தன்னுடைய இடத்திலே வேலை செய்ய சொல்லிவிடுவார். யாருடைய வெளியீடு என்றாலும் உதவி என்று கேட்டால், எந்த மறுப்பின்றி உரிய நேரத்திற்குள் செய்து கொடுக்கும் அன்புமணி அண்ணையை இழந்து ...

Read More »

கடற்சிறுத்தை பெண்புலி நாதினி

1996 காலப்பகுதியில் முல்லைசாளையில் அமைந்திருந்த வண்-வண் எனப்படும் கடற்புலிகளின் தளத்திற்கு 40 கடற்சிறுத்தைப் பெண்புலிகள் புதிதாக வந்துசேர்ந்தனர். ஒயாத அலைகள் -1 முல்லைத்தள வெற்றிச்சமருக்கான கடினமான கடற்பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது, அதேவேளை உயரக்கடல் ஆயுத வினியோக நடவடிக்கையும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. வினியோக நடவடிக்கைகளில் கொலின்ஸ்,வினோத்,தர்மன்,தீபன் போன்ற அதிவேகப்படகுகள் ஈடுபடுத்தப்பட்டு நடுச்சாம வேளைகளில் இரகசியக் கடற்பயணங்கள் நடைபெற்றுவந்தது. முதன்முதலாக எமது இயக்கத்துக்கு இரட்டைக்குழல் கனொன் பீரங்கிகள் இறக்கப்பட்டு சமவேளையில் அதற்கான பயிற்சிகளும் பிரமந்தனாறு காட்டுப்பகுதியில் ...

Read More »

அமைதியான ஆளுமை, ஆர்ப்பாட்டமற்ற ஆற்றல் – லெப். கேணல் சித்தார்த்தன்.!

மட்டக்களப்பபு மாவட்டத்தின் விடுதலைப்புலிகளின் தளப்பகுதி. அடிப்படைப் பயிற்சி முகாம் ஒன்று நிறைவடைந்து புதிய போராளிகள் பல்வேறு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அத்தகைய வேளைகளில் இயல்பாகக் காணப்படும் புத்துணர்வும், கலகலப்பும் அவர்களின் முகங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆயினும் எமது முகாமிற்கு வரவிருந்த புதிய போராளிகள் அநேகரின் முகங்களில் ஒருவகையான கலக்கத்தை அவதானிக்க முடிந்தது. காரணத்தை ஊகிப்பது அவ்வளவு கடினமல்ல. படைத்துறைப் பயிற்சிப் பிரிவாக செயற்பட இம் முகாம் சற்று வேறுபாடானதுதான். மிகக் ...

Read More »

இஸ்லாமியத் தமிழ் மாவீரன் லெப் கேணல் மாறன்/குன்றத்தேவன்

1999ம் ஆண்டு வன்னி மீதான இலங்கைப் படையினரின் மிகவும் மூர்க்கத்தனமான தாக்குதலால் இயக்கத்தில் இணைந்தவர்களில் ஒருவனாக வந்த மாறன். தனது அடிப்படை பயிற்சியை மாறன் 10ல் முடித்தவன் .அப்பயிற்சி முகாமிலிருந்து ஒரு தொகைப் போராளிகள் கடற்புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டபோது இங்கு வந்து கடற்புலிகளுக்கான பயிற்சியை முடித்து .மணலாற்றுக் களமுனைக்குச் சென்றான்.அங்கு சில காலம் களமுனையில் நின்றவன் .தொடர்ந்து கடற்புலிகளின் தரைத் தாக்குதலனியான சூட்டி படையணி வடமராட்சிக் கிழக்கு களமுனைக்கு அனுப்பப்பட்டபோது இவனும் ...

Read More »

எருக்கலம்பிட்டியில் வீரவரலாறாகிய கடற்புலி மேஜர் சீர்மாறன்.

11-06-2008. அதிகாலை 5.00 மணியிருக்கும். புதுக்குடியிருப்பு- கைவேலிப்பகுதியில் அமைந்திருந்த எனது முகாம் வோக்கி “அல்பா றோமியோ……. அல்பா றோமியோ….. பப்பா சேரா……” என்று தொடர்ச்சியாக அழைத்துக்கொண்டிருந்தது. அரைத்தூக்கத்தில் படுத்திருந்த நான் வோக்கி அழைக்கும் சத்தம் கேட்டதும் அவசரமாக எழுந்து வோக்கியின் அழைப்பை ஏற்றுக்கொண்டபோது எதிர்முனையில் கடற்புலிகளின் நிர்வாகச்செயலகப்போராளி கதைத்தார். “சீர்மாறனும் இன்னும் நான்கு போராளிகளும் வீரச்சாவு. மன்னார்- எருக்கலம்பிட்டியில் எங்கடயாட்கள் நல்ல அடி கொடுத்திருக்கிறார்கள். நவீனரக ராடர்களும் ஆயுதங்களும் எடுத்திருக்கிறார்கள்.” ...

Read More »

நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் மேஜர் கமல்

அமரர் துரைரத்தினம்- இவரின் வாழ்க்கையை நீங்கள் அறிந்ததுண்டா? சொத்து சுகபோக வாழ்க்கை என அலையும் தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் சொத்து என்று எதையும் சேர்க்காது தனது மிகப்பெரும் சொத்தாக இருந்த இரு பிள்ளைகளை விடுதலைப்போராட்டத்திற்கு கொடுத்து விட்டு இறுதிக்காலத்தில் ஆச்சிரமத்தில் இருந்து காலமானவர்தான் பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரத்தினம். தமிழ் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கல்வி கற்கிறார்கள் என பரவலான குற்றச்சாட்டு காணப்படுகிறது. இந்த காலத்தில் சொத்து ...

Read More »

கடமையுணர்வுகொண்ட கப்டன் கலைஞன்

யாழ்மாவட்டத்தில் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறையை பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் கலைஞன் தனது பள்ளிப் படிப்பபை உடுத்துறை மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தார். 2004-ம் ஆண்டு பிற்பகுதியில் தன்னை தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக் கொண்ட கலைஞன் தனது அடிப்படை படையப் பயிற்சிகளை முடித்துக்கொண்ட பின்னர் கடற்புலிகள் உறுப்பினராகச் செயற்படலானார். 2005-ம் ஆண்டு காலப்பகுதியில் சிறிது காலம் திருமலை மாவட்டத்தில் போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்த கலைஞன் மீண்டும் வன்னிக்கு வந்தார். வன்னிக்கு வந்த கலைஞன் ...

Read More »