Home / ஆவணங்கள் / ஆவணங்கள்

ஆவணங்கள்

தமிழீழ அடையாள அட்டை

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக அலகுகளில் ஒன்று ஆட்பதிவு திணைக்களம். இதன் செயற்பாடு 01-01-2007 ஆரம்பமானது. முதன்முதலில் ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் (ச.சித்திரன்) அலுவல்சாராக(Officially) தமிழீழ அடையாள அட்டையினை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுக்கு வழங்கி வைத்துள்ளார்.       அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஆள்அடையாள அட்டைகளில் பிறந்த திகதி பால் பிறந்த இடம் முகவரி தொழில் போன்ற முக்கிய தரவுகள் ...

Read More »

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதிமுடக்கம் பற்றிய செய்தி

சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் 1200 இற்கும் மேற்பட்டவர்களை பணியில் ஈடுபடுத்தி பல மனிதாபிமான உதவி நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் நிதிகளை சிறிலங்கா அரசு 2008 இல் முடக்கம் செய்திருந்தது. அதுபற்றிய நிறுவனத்தின் அறிக்கை வருமாறு: TRO_19_11_08 Tsunami Financial Report

Read More »

தமிழீழத் தேசியத் தலைவர் கல்விமேம்பாட்டுநிதியம்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஐம்பதாவது பிறந்தநாளையொட்டிக் கல்விமேம்பாட்டுநிதியம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். ஆண்டுதோறும் ஒரு கோடி உரூபா இந்நிதியத்திற்கு ஒதுக்கப்படும். எம்மால் நடத்தப்படும் தமிழ்மொழித் திறன்தேர்விலும் பொதறிவு மற்றும் உளச்சார்புத் தேர்விலும் சிறந்த பெறுபேறு பெறுவோருக்கு இந்நிதியத்திலிருந்து காசுப்பரிசில்கள் வழங்கப்படும். தமிழீழத்தில், க.பொ.த (சா/த) தரத் தேர்விற் சிறந்த பெறுபேறுகளுடன் தேறி நிதிவாய்ப்பின்மையால் தொடர்ந்து கற்கமுடியாத மாணவருக்கும் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்வதில் நிதிச்சிக்கல்களை எதிர்நோக்கும் மாணவருக்கும் ...

Read More »

பலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள்

2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர். பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும். 1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது. அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது ...

Read More »

சோழர்களுக்குப் பிறகு தமிழர்களின் கடற்படை – தளபதி சூசை

கேள்வி : உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்தான் சக்திவாய்ந்த அதி நவீனமான ஒரு கடற்படை கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது. இந்த சிந்தனை, பலம், எங்கிருந்து பிறந்தது? பதில்: உலக வரலாற்று நூல்களையும், வரலாற்று நாவல்களையும் வாசித்தறிந்த தலைவரின் மனதில் சோழனின் கடற்படை இடம் பிடித்துக் கொள்கிறது (பண்டைய தமிழ் மன்னர்கள் யாவரும் கடற்படையை வைத்திருந்தபோது பலம் வாய்ந்த ...

Read More »

பேச்சுக்களை குழப்பிய சிறிலங்கா அரசின் உண்மைமுகம் – வெளிப்படுத்தும் நேர்காணல்

19:47 கூட்டமைப்பு 20:43 23 இல் 22 பா.உ வென்றார்கள் 21:21 இயற்கை மாற்றிய வழி 24:49 சுனாமி கட்டமைப்பு 26:57 தமிழர்களின் இருப்பை அழிப்பதை சிங்கள அரசு செய்கிறது 29:29 2000 இல் இன்னும் சிறிதுகாலம் நடவடிக்கை தொடர்ந்திருந்தால் தமிழர்தாயகத்தில் பெரும்பாலான பகுதி விடுபட்டிருக்கும். 31:43 இந்திய படைகளை கொண்டுவந்து அழிக்கமுற்பட்டார்கள் 31:47 சர்வதேச உதவியுடனேயே எமது மக்களை அழித்தார்கள். 32:19 உலகம் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்தது. மக்கள் ...

Read More »

மாவீரர் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்

தமிழீழ விடுதலையின் அனைத்து அங்கங்களும் பலமான அத்திவாரத்திலலேயே கட்டியெழுப்பப்ட்டன. அதற்கென ஆழமான பார்வையும், நீண்ட தீர்க்கமான வரைமுறையும் உண்டு. இன்று ஆட்டம் கண்டு நிற்கும் தமிழ் வாழ்வியலில் இவை புறம்தள்ளப்பட்டுவிடுமோ என்ற பேரச்சம் காரணமாக அதனை விரிவாக மீண்டும் ஒரு முறை எடுத்து வருகின்றேன். பெருமை கொள் இவ்வரலாற்றை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். அவை தீர்க்கதரிசனத்துடன் முன்கூட்டியே பதியப்பட்டுள்ளன. 2005 மாவீரர் நாளுக்கு வெளியான இப்பதிவை இன்றைய சூழலில் எடுத்து ...

Read More »

இறுதிவரை பயணித்த ஈழநாதம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு படைப்பிரிவாகவே செயற்பட்டுவந்த “ஈழநாதம் மக்கள் நாளிதழ்” இன விடுதலைப் போர்க்களத்தில் தடைகள் பல கடந்து சரித்திரம் படைத்துள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணத்தை செயல்வடிவமாக்கும் உண்ணத பணியை 1990.02.19 அன்று ஆரம்பித்து நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதி காலமாகிய ஆயுத மௌனிப்பிற்கு அண்மித்தாக 2009.05.10 ஆம் நாள் வரை செவ்வனே செய்து வந்திருந்தது ஈழநாதம் மக்கள் நாளிதழ். ஆயுத மௌனிப்பின் ...

Read More »

சுதுமலை பிரகடனம்!

இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலை கோவிலடியில் வரலாற்று சிறப்புமிக்க பிரகடனத்தை வெளியிட்ட 30-வது ஆண்டு இன்றுதான். 1987-ம் ஆண்டு இலங்கையுடன் திடீரென அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஒப்பந்தம் போட முடிவு செய்துவிட்டார். ஆனால் களத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் முதலில் ஆலோசிக்கவில்லை. பின்னர் டெல்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் ...

Read More »