Recent Posts

February, 2021

  • 21 February

    செயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம்

    மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்ட யாழ்.குடாநாட்டின் வெள்ளலைகள் கரைதழுவுகின்ற வடமராட்சிக் கிழக்குப்பிரதேசத்தில் மருதங்கேணி எனும் நெய்தல் நிலமண்ணில் 1973-ம் ஆணடு பெப்ரவரி மாதத்தில் தங்கவேலு காந்திமலர் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தான் சுதரதன். அம்மா அப்பா மற்றும் இரண்டு சகோதரர்களையும் ஒரு சகோதரியையும் கொண்ட அளவான குடும்பம். சுதரதனை எல்லோரும் செல்லமாக சுதன் என்றே அழைத்தனர். சுதன் தனது மழலைப் பருவத்தைக் கடந்து தனது பள்ளிப் படிப்பில் ஆரம்பக் கல்வியை மருதங்கேணி ...

    Read More »
  • 13 February

    புலிமகள்…

    அங்காங்கே சில்லிட்டு கத்திக் கொண்டிருக்கும் சில்வண்டுகளின் ரீங்காரத்தையும் சின்ன சின்ன பொட்டுக்களாய் மினுமினுக்கும் மின்மினிப் பூச்சிகளின் சிற்றொளியையும் ஊர்ந்து திரியும் பாம்புகளையும் பூரான்களையும் தாங்கி நிமிர்ந்து நின்றது அந்த காட்டுப் பூமி. அவ்வப்போது எட்டிப் பார்க்கும் விலங்குகள் தண்ணீருக்காக அந்தக் காட்டோரத்தில் உள்ள குளக்கரை நோக்கி படையெடுத்து வருவது எல்லாம் இப்போது இல்லை. சிங்களத்துடனான எம்மவர்களின் மோதல்களும், ஆக்கிரமிக்க வந்து கொண்டிருந்த சிங்கள வல்லாதிக்கத்தின் வெடிபொருட்களின் வெடிப்பின் தாக்கமும் அவற்றையும் ...

    Read More »
  • 13 February

    பொத்துவில் மண்ணில் விடுதலை நெருப்பாய் லெப். சைமன் (ரஞ்சன்)

    தென் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களுரின் தொடரூந்து நிலையத்தில் சுமார் நூறுவரையிலான விடுதலைப்புலிப் போராளிகள் இராணுவப் பயிற்சிபெறும் நோக்கோடு செல்வதற்கு தயாரான நிலையில் இருந்தனர். அப்போது ரஞ்சன் தனது போராளி நண்பர்களை நோக்கி இந்த பெங்களூர் நகருக்கு நான் அப்போதே வரவிருந்தேன். வானூர்தி ஓட்டியாக பயிற்சி பெறுவதற்கு இங்குள்ள நிறுவனத்தில் அனுமதியும் பெற்றிருந்தேன். ஆனால் வரவில்லை. இன்று, இங்கு நிற்கின்றபோது அதையும் எண்ணிப்பார்க்கின்றேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஏனெனில் ...

    Read More »

December, 2020

  • 28 December

    மாவீரர் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்

    தமிழீழ விடுதலையின் அனைத்து அங்கங்களும் பலமான அத்திவாரத்திலலேயே கட்டியெழுப்பப்ட்டன. அதற்கென ஆழமான பார்வையும், நீண்ட தீர்க்கமான வரைமுறையும் உண்டு. இன்று ஆட்டம் கண்டு நிற்கும் தமிழ் வாழ்வியலில் இவை புறம்தள்ளப்பட்டுவிடுமோ என்ற பேரச்சம் காரணமாக அதனை விரிவாக மீண்டும் ஒரு முறை எடுத்து வருகின்றேன். பெருமை கொள் இவ்வரலாற்றை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். அவை தீர்க்கதரிசனத்துடன் முன்கூட்டியே பதியப்பட்டுள்ளன. 2005 மாவீரர் நாளுக்கு வெளியான இப்பதிவை இன்றைய சூழலில் எடுத்து ...

    Read More »
  • 22 December

    கப்டன் கலைமதி – காணவந்த தாய் கண்ட நினைவுக்கல்

    யாழ். மாவட்டம் உரும்பிராயை பிறப்பிடமாகக் கொண்டவர் சுதாஜினி. 1991 – 1992ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கலைமதியாக இவர் பல வெற்றிகரத் தாக்குதல்களில் பங்கேற்றவர். 18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ‘ஓயாத அலைகள் 01’ நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். கலைமதியின் உறவினர்கள் அன்று இராணுவ ஆக்கிரமிப்பு ஊர்களினுள் இருந்தமையால் உறவினர்களுக்கு வீரமரண செய்தி அறிவிக்கப்படாமல் தமிழீழ மாவீரர் பணிமனை கிளிநொச்சி கோட்டத்தின் ஊடாக இறுதி ...

    Read More »